கல்பக வ்ருக்ஷம் ! ! !
ராதேக்ருஷ்ணா
கல்பக வ்ருக்ஷம் !
வானுலகில் ஒரு மரம் !
அதன் பெயர் !
கல்பக வ்ருக்ஷம் !
அதன் அடியில் போய் நின்று கேட்டால்,
அது கேட்டதையெல்லாம் தரும் !
என்ன ஆசையாய் இருக்கிறதா ? ! ?
நீயும் இந்த உலகில் ஒரு அழகான
கல்பக வ்ருக்ஷத்தின் கீழ் தான்
இத்தனை வருஷமாய் நிற்கிறாய் !
இது வரை அந்த கல்பக வ்ருக்ஷம்
உனக்கு வேண்டிய பலவற்றை
தாராளமாகக் கொடுத்திருக்கிறது !
நீ பலமுறை உன் ஆசையினால்
வழி தவறினபோதும் அந்த மரம்
உனக்கு நல்லதையே செய்திருக்கிறது !
இப்பொழுதும் அது உனக்கு
நல்லதை மட்டுமே செய்கிறது !
இனி வரும் காலத்திலும் உனக்கு
நல்லதை மட்டுமே செய்யும் !
அந்த கல்பக வ்ருக்ஷத்தின் பெயர்
"வாழ்க்கை" !
அது எப்படி என்று கேட்கிறாயா ?
யோசித்து பார் !
சிறிய வயதில் பொம்மை கேட்டாய் ;
வளரும் வயதில் நிறைய கேட்டாய் ;
ஆசை ஆசையாய் வெற்றிகள் கேட்டாய் ;
உன் முன் வினைகளால்
நீ நொந்து போன சமயத்திலும்
இந்த கல்பக வ்ருக்ஷம்
உனக்கு நல்லதைக் கொடுத்தது !
இது போல் நிறைய சொல்வேன் !
எல்லாவற்றையும் நான் உள்ளபடி
சொல்லிவிட்டால் நீ எப்பொழுதுதான்
யோசிப்பாய் . . .
யோசி . . .யோசி . . . யோசி . . .
நீயும் உன் அனுபவங்களை
ஆனந்தவேதமாய் சொல்லவேண்டாமா ?
எனக்கு ஆசை . . .
உன் ஆனந்தவேதத்தைப் படிக்க ! ! !
நீயும் எழுதுவாய் . . .
எனக்கு நம்பிக்கை இருக்கிறது ! ! !
உன் வாழ்க்கை ஒரு கல்பக வ்ருக்ஷமே !
என் வாழ்க்கை ஒரு கல்பக வ்ருக்ஷமே !
நம் வாழ்க்கை ஒரு கல்பக வ்ருக்ஷமே !
வாழ்க்கை என்னும் கல்பக வ்ருக்ஷத்திடம்
வித விதமாய் கேட்கலாம் !
கொஞ்சம் உதாரணங்கள் சொல்லட்டுமா ?
த்ருவன் ஸ்ரீஹரியைக் கேட்டான் !
ப்ரஹ்லாதன் நரசிம்மனைக் கேட்டான் !
கோபிகைகள் க்ருஷ்ணனைக் கேட்டனர் !
மீரா கிரிதாரியைக் கேட்டாள் !
சக்கு பாய் விட்டலனைக் கேட்டாள் !
விபீஷணன் ராமனைக் கேட்டார் !
லக்ஷ்மணன் கைங்கர்யத்தைக் கேட்டார் !
சத்ருக்னன் பாகவத பக்தியைக் கேட்டார் !
யசோதா பகவானின் தாயாகவும்,
பாலக்ருஷ்ண லீலையையும் கேட்டாள் !
சத்ரபதி சிவாஜி இந்து சாம்ராஜ்யத்தை
திடமாகக் கேட்டான் !
குலசேகர ஆழ்வார் அடியவர்
குழாத்தில் வாழ்க்கைக் கேட்டார் !
நம் கோதை நாச்சியார் ரங்கனை
மணாளனாகக் கேட்டாள் !
பத்ராசல ராமதாசரோ தன் ராமனுக்கு
அழகான ஒரு கோயிலைக் கேட்டார் !
வேத வ்யாசரோ தன் ஆத்மாவுக்கு
த்ருப்தியான ஒரு நூலைக் கேட்டார் !
சுகப்ரும்ம மஹரிஷியோ தன் பாகவதம்
கேட்க ஒரு சிஷ்யனைக் கேட்டார் !
பரீக்ஷித்தோ தனக்கு சரியான வழி காட்ட
ஒரு சத் குருவைக் கேட்டார் !
துந்துகாரி தன் பிசாசு ஜன்மம் நீங்க
சரியான தீர்வு கேட்டான் !
சந்த் துகாராம் தன் விட்டலனின்
இதயத்தில் ஓர் இடம் கேட்டார் !
பெரியாழ்வார் தன் பகவான் பல்லாண்டு
பல்லாண்டு நன்றாயிருக்கக் கேட்டார் !
சைதன்யர் எல்லா ஜனங்களும் பகவன் நாமம்
விடாமல் ஜபிக்கக் கேட்டார் !
கஜேந்திரன் முதலைப் பிடியில் இருந்து
தன்னைக் காப்பாற்றக் கேட்டது !
கூரத்தாழ்வான் தான் பெற்ற நாலூரானும்
பெற வேண்டுமெனக் கேட்டார் !
ஸ்வாமி இராமானுஜர் எல்லோரும்
மோக்ஷம் அடைய தனக்கு நரகம் கேட்டார் !
ஸ்வாமி ஆளவந்தார் ஸ்ரீ வைஷ்ணவத்திற்கு
நம் இராமானுஜரைக் கேட்டார் !
இப்படி பல கோடி பேர்
அற்புதமான பல விஷயங்களைக்
கேட்டுப் பெற்றனர் !
இந்தக் கல்பக வ்ருக்ஷத்திடம்
தப்பானவற்றைக் கேட்டவரும் உண்டு !
இராவணன் அடுத்தவரின்
மனைவியைக் கேட்டான் !
இரண்ய கசிபு பக்தரை
அழிக்கக் கேட்டான் !
இரண்யாக்ஷன் பலசாலியான
விரோதியைக் கேட்டான் !
நான் ஏன் தப்பாகக் கேட்டவரைப்
பற்றி நிறைய சொல்லுவானேன் ?
இப்பொழுது நீ சொல் ?
ஓ ! நான் என்ன கேட்டேன்
என்று கேட்கிறாயா ?
நான் என்ன கேட்டேன் என்பதை
காலம் பதிலாய் சொல்லும் ! ! !
நீ சொல் . . .
நீ என்ன கேட்டாய் ?
போனதெல்லாம் போகட்டும் !
இனி நீ என்ன கேட்கப்போகிறாய் ! ! !
யோசித்து முடிவெடு . . .
உனக்குத் தர உன்
கல்பக வ்ருக்ஷம் ( வாழ்க்கை)
சுகமாய் காத்திருக்கிறது !
சீக்கிரம் கேட்டுக்கொள் ! ! !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக