ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 பிப்ரவரி, 2013

ஒன்றரை லக்ஷம் கோடி !

ராதேக்ருஷ்ணா
 
 
ஆசை . . . ஆசை . . .
 
 
 பத்மநாபனின் பாதத்தில்
பாதுகையாக இருக்க ஆசை !


பத்மநாபனின் கணுக்காலில்
கொலுசாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் இடுப்பில்
பீதாம்பரமாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் நெஞ்சில்
கௌஸ்துபமாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் உடம்பில்
சந்தனமாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் தோள்களில்
தோள்வளையாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் கைகளில்
தாமரையாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் விரல்களில்
மோதிரமாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் கழுத்தில்
துளசி மாலையாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் செம்பவள உதட்டில்
அழுத்தமாய் முத்தமிட ஆசை !
 
 
பத்மநாபனின் மூக்கில்
புல்லாக்காக உரச ஆசை !
 
 
 பத்மநாபனின் கண்களை
விடாமல் பார்க்க ஆசை !
 
 
பத்மநாபனின் நெற்றியில்
கஸ்தூரி திலகமாய் இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் காதுகளில்
மகர குண்டலமாக தவழ ஆசை !
 
 
பத்மநாபனின் திருமுடியில்
கிரீடமாக வீற்றிருக்க ஆசை !
 
 
இது போதுமா ? ? ?
 
சத்தியமாய் போதவே போதாது ? ? ?
 
வேறு என்னவெல்லாம் ஆசைகள் ?
 
 
 சொல்லட்டுமா . . .
 
 
பத்மநாபனோடு ரகசியமாய்
காதோடு பேச ஆசை !


பத்மநாபனின் காதலியாய்
ஜீவித்திருக்க எப்பொழுதும் ஆசை !


பத்மநாபனின் மனைவியாய்
நானும் இருக்க ஒரு பேராசை !


பத்மநாபனின் பிள்ளையை
என் மணி வயிற்றில் சுமக்க ஆசை !


பத்மநாபனுக்கு விதவிதமாய்
சமைத்துப் போட ஆசை !


பத்மநாபனுக்கு எண்ணை
தேய்த்துக் குளிப்பாட்டிவிட ஆசை !


பத்மநாபனின் வஸ்திரங்களை
அழகாக தோய்த்து அலச ஆசை !


பத்மநாபனை மடியில் போட்டுக்கொண்டு
தாயாக பால் கொடுக்க ஆசை !


பத்மநாபனுக்கு அறிவுரை சொல்லும்
தந்தையாக ஆட்சி செய்ய ஆசை !


பத்மநாபனை தம்பியாக பாவித்து
அண்ணனாய் பொறுப்பாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனை அண்ணனாய் ஏற்று
அவன் சொல்படி நடக்க ஆசை !
 
 
 பத்மநாபனுக்கு மாமனாக இருந்து
அவன் கேட்பதெல்லாம் வாங்கித்தர ஆசை !
 
 
பத்மநாபனுக்கு சகோதரியாய்
கார்த்திகை சீர் வாங்க ஆசை !
 
 
பத்மநாபனுக்கு பேரனாய் இருந்து
அவன் தோளில் சவாரி செய்ய ஆசை !
 
 
பத்மநாபனோடு நண்பனாக
கடற்கரை மணலில் காலாற நடக்க ஆசை !
 
 
 பத்மநாபனின் மந்திரியாக
உத்தவன் போல் தூது செல்ல ஆசை !
 
 
பத்மநாபனின் சிஷ்யனாக
அர்ஜுனன் போல் கீதை கேட்க ஆசை !
 
 
பத்மநாபனின் கோயிலில் பூஜை
செய்யும் போத்தியாக ஆக ஆசை !
 
 
பத்மநாபனை தரிசிக்கும்
திருவிதாங்கூர் ராஜனாக வாழ ஆசை !
 
 
பத்மநாபனுக்கு கைங்கர்யம்
செய்யும் ஒருவனாக இருக்க ஆசை !
 
 
பத்மநாபனின் கோயிலில்
தீபமாக வெளிச்சம் தர ஆசை !
 
 
பத்மநாபா . . .
இன்னும் கோடி ஆசைகள் உண்டு !
 
 
சரியாக சொல்லப்போனால்,
ஒன்றரை லக்ஷம் கோடி ஆசைகள் !
 
அது இல்லாமல் இன்னமும் உண்டு !
 
 
உனக்குத்தான் தெரியுமே . . .
 
 
எனக்கு அவசரமே இல்லை !
நிதானமாக ஒவ்வொரு ஜன்மாவாகக் கொடு !
 
 
நான் இருந்து அனுபவிப்பேன் !
 
 
இப்பொழுது கோபாலவல்லியாய்
அனுபவித்துக் கொள்கிறேன் ! ! !
 
 
மற்ற ஆசைகள் ஒவ்வொரு ஜன்மாவாக !
 
 
நீ மறக்காதே !
 
அப்போதைக்கு இப்போதே
சொல்லி வைத்தேன் அனந்தபுர அழகனே !
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP