ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 அக்டோபர், 2013

வாராரு . . . வாராரு . . .

ராதேக்ருஷ்ணா



வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
கருடன் மேலே ஜோராய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ரங்கராஜனோடு அமர்க்களமாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஸ்ரீநிவாசனோடு சிங்காரமாய் வாராரு ! ! !
 

வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வரதராஜனோடு வரம் தர வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஜகந்நாதனோடு ஜகத்தை ஆள வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஒய்யாரமாய் இராமானுஜரோடு வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
 உரிமையோடு பக்தர்களோடு வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
புரட்டாசியில் பொக்கிஷமாய் வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
சங்கடங்கள் தீர்க்க சனிக்கிழமை வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
இந்துக்கள் ஜெயிக்க வீரமாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வினையெல்லாம் மாற்றி சரிசெய்ய வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஊரே கொண்டாட ஆசையாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
தெருவெல்லாம் பன்னீரால் நனைய வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
பக்தர்களின் குறையெல்லாம் தீர்க்க வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஆண்டாள் மாலையோடு அற்புதமாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
பாவிகளையும் திருத்த பரந்தாமனாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வைகுந்தம் தந்திடவே விரைவாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
இந்துமந்திர நகரம் சிறக்க வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
விண்ணும் மண்ணும் மகிழவே வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வேத மந்திரங்களோடு வேகமாய் வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
திவ்ய ப்ரபந்தத்தோடு சீராக வாராரு ! ! !
 
 
 வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
நாம ஜபத்தோடு நமக்காக வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
தேவரெல்லாம் கைகூப்ப தெருவெல்லாம் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
உன்னையும் என்னையும் காப்பாத்த வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
தூத்துக்குடி பக்திக்குடியாக மாற்றி வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
செண்டை மேளத்தோடு செழிப்பாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
நாதஸ்வர மேளத்தோடு நாயகனாய் வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வாராரு வாராரு வசந்தம் தர வாராரு !
வாராரு வாராரு வாழ்வை மாற்ற வாராரு !
வாராரு வாராரு வெற்றி தர வாராரு !
 
 
சீக்கிரமா வா . . .
எல்லாம் வாங்கிக்க வா . . .
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP