ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 பிப்ரவரி, 2016

அக்ஷயபாத்திரம் !!!

ராதேக்ருஷ்ணா...

வாழ்க்கை அழகானது...
வாழ்க்கை அற்புதமானது...
வாழ்க்கை அதிசயமானது...

உன் வாழ்வை நீ
வாழும் முறையில் தான்
அது அக்ஷயபாத்திரமாகிறது...

என்னால் முடியாது என்பதே பலவீனம்...

எதுவும் முடியும் என்பதே தெய்வீகம்...

எதுவும் மாறாது என்பதே தோல்வி...

எல்லாவற்றையும் மாற்றமுடியும் என்பதே வெற்றி...

யாரும், எதுவும் சரியில்லை என்பதே முட்டாள்தனம்...

என்னை சரி செய்துகொள்ள வேண்டும் என்பதே புத்திசாலித்தனம்...

தவறுகளை நியாயப்படுத்துபவர் வாழ்வில் உயர்வதில்லை...

தவறுகளை திருத்திக்கொள்பவர்
உலகையே ஜெயிக்கிறார்...

எதையும் புரிந்து கொள்ளத் தயங்குபவர் துரதிருஷ்டசாலி !

தன்னையும் தெய்வத்தையும் புரிந்து கொள்ள முயற்சிப்பவர் அதிருஷ்டசாலி !

உன் வாழ்வை நீ
பார்க்கும் முறை என்ன ?

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP