ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 ஜனவரி, 2017

அரங்கனின் கோல மயிலே !

மாரி காலத்தில் குகையில்
சீரிய சிங்கம் துணையுடன்
பிரியாமல் இருப்பதை
பரிவுடன் சொன்ன ,
அரங்கனின் கோல மயிலே !
வைகுண்டம் நீயே எமக்கு !


அறிவுற்ற சிங்கத்தின்
எரிக்கும் பார்வையையும்
வேரி மயிர் சிலிர்ப்பையும்
பரிவுடன் சொன்ன,
அரங்கனின் கோல மயிலே !
வைகுண்டம் நீயே எமக்கு !


சூரியனாய் எழுந்து,
மூரி நிமிர்ந்து முழங்கி
தைரியமாய் வரும் சிங்கத்தை,
பரிவுடன் சொன்ன,
அரங்கனின் கோல மயிலே !
வைகுண்டம் நீயே எமக்கு !


சீரிய சிங்கம் போல்
சீரிய சிங்கனே நீ,
கோரிய வரமருள வாவென,
பரிவுடன் சொன்ன,
அரங்கனின் கோல மயிலே !
வைகுண்டம் நீயே எமக்கு !


கரிய காயாம்பூ வண்ணனை,
பெரிய கோயில் விட்டு,
சிறிய எமக்காய் வாவென,
பரிவுடன் சொன்ன,
அரங்கனின் கோல மயிலே,
வைகுண்டம் நீயே எமக்கு !


சீரிய சிங்கனுக்கு
சீரிய சிங்காசனம் தந்து
காரியம் கேள் என
பரிவுடன் சொன்ன
அரங்கனின் கோல மயிலே,
வைகுண்டம் நீயே எமக்கு !


புரியாமல் கேட்பதை
அறிந்து ஆராய்ந்து
தெரியாமல் தருவாய் என
பரிவுடன் சொன்ன
அரங்கனின் கோல மயிலே,
வைகுண்டம் நீயே எமக்கு !


அறிவே இல்லாத எமக்கு
அரியைத் தர வந்த
மரிக்கொழுந்தே,
உரிமையாய் எம்மிடம்
பரிவாய் உள்ளவளே !
வைகுண்டம் நீயே எமக்கு !


அரியின் கோல மயிலே,
புரியும் காலமெல்லாம்,
தெரியாமல் வீணடித்து,
பெரியோர் ஆனபின்,
குறியில்லாமல் ஓடும்,
தரிகெட்ட எம்மை
பிரியாமல் காப்பாய் !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP