தங்க நங்கை ஆண்டாளே !
அங்கண் மா ஞாலத்து
செங்கோல் அரசரெல்லாம்
தங்கள் அபிமானம்
பங்கமாக வந்தாரோ...
உன் வாய்மொழியாக...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே...
சங்கமாக தேவரும்
ரங்கனின் பள்ளிக்கட்டிற்கு
சங்கு முழங்காமல்
சங்கோஜமாய் வந்தனரோ...
உன் வாய்மொழியாக...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே...
பங்கஜக் கண்ணனை
சங்கோஜமில்லாமல் அடைய
பொங்கும் பக்தியோடு
மங்கையரும் வந்தனரோ...
உன் வாய்மொழியாக...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே....
கிங்கிணி வாய் போல்
செங்கண் எம்மேல்
பங்கமில்லாமல் நோக்க
சிங்காரமாய் விழித்ததோ...
உன் வாய்மொழியாக...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே....
கொங்கையில் மயங்கித்
தங்கும் பங்கஜக்கண்கள்,
திங்களாய் சூரியனாய்
எங்கள் மேல் நோக்கியதே...
உன் வாய்மொழியாக...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே...
அங்கண் நோக்கியதால்
எங்கள் சாபம் இழியவில்லை...
எங்கள் செல்லம் உன்
செங்கண் நோக்கியே
எங்கள் சாபம் மாறியதே...
ரங்கராஜன் ஆனந்தமாய்
தங்கும் நெஞ்சுடை ஆண்டாளே...
எங்கும் சுத்தி
ரங்கம் தங்கும்,
ரங்கனும் உன்னிடம்
தங்க காத்திருக்கிறான்...
எங்களுக்கும் திருவடியில்
தங்க ஒரு வரம் அருளே...
தங்க நங்கை ஆண்டாளே...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக