ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 ஜனவரி, 2017

ஆண்டாளோடு கோவிந்தா !

கறவைகள் பின் செல்வோம் கோவிந்தா,
காட்டில் சேர்ந்து உண்போம் கோவிந்தா !

அறிவே இல்லையே கோவிந்தா,
அறியாத ஆய் குலமே கோவிந்தா !

பிறவிப் புண்ணியமே கோவிந்தா ,
குறையொன்றும் இல்லை கோவிந்தா !

உன் பிறவி எமக்கே கோவிந்தா,
எம் வாழ்வு உனக்கே கோவிந்தா !

குறையே இல்லாத கோவிந்தா,
உறவே நீயானாய் கோவிந்தா!

அறியாத பிள்ளைகள் கோவிந்தா,
சிறு பேர் அழைத்தோம் கோவிந்தா !

சீறி அருளாதே நீ கோவிந்தா,
பறை தாராய் நீ கோவிந்தா !

உனையே நினைத்தாளே கோவிந்தா,
உனையே பாடினாளே கோவிந்தா !

உனையே கேட்கிறோம் கோவிந்தா,
உனையே சரணடைந்தோம் கோவிந்தா !

நீயே தருவாய் கோவிந்தா,
நீங்காத உறவை கோவிந்தா !

ஆண்டாளோடு கோவிந்தா,
ஆண்டாண்டு கோவிந்தா !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP