ஆண்டாளோடு கோவிந்தா !
கறவைகள் பின் செல்வோம் கோவிந்தா,
காட்டில் சேர்ந்து உண்போம் கோவிந்தா !
அறிவே இல்லையே கோவிந்தா,
அறியாத ஆய் குலமே கோவிந்தா !
பிறவிப் புண்ணியமே கோவிந்தா ,
குறையொன்றும் இல்லை கோவிந்தா !
உன் பிறவி எமக்கே கோவிந்தா,
எம் வாழ்வு உனக்கே கோவிந்தா !
குறையே இல்லாத கோவிந்தா,
உறவே நீயானாய் கோவிந்தா!
அறியாத பிள்ளைகள் கோவிந்தா,
சிறு பேர் அழைத்தோம் கோவிந்தா !
சீறி அருளாதே நீ கோவிந்தா,
பறை தாராய் நீ கோவிந்தா !
உனையே நினைத்தாளே கோவிந்தா,
உனையே பாடினாளே கோவிந்தா !
உனையே கேட்கிறோம் கோவிந்தா,
உனையே சரணடைந்தோம் கோவிந்தா !
நீயே தருவாய் கோவிந்தா,
நீங்காத உறவை கோவிந்தா !
ஆண்டாளோடு கோவிந்தா,
ஆண்டாண்டு கோவிந்தா !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக