முதல் முறையாய் !
அமுதனே உனக்காக வருகிறேன் !
அரங்கத்து அமுதனே உனக்காகவே வருகிறேன் !
திருவரங்கத்து அமுதனே,
உன்னடிமை வருகிறேன் !
அமுதனின் அமுதான,
ராமானுஜ அமுதை,
அடியோங்களுக்கு உள்ளபடி
காட்டித் தந்த,
திருவரஙகத்தமுனாரே,
உன் திருவடியில் அடியேனைத் தர வருகிறேன் !
பல ஜன்மாக்கள்
சுற்றிவிட்டேன் !
பல உடலில்
வாழ்ந்துவிட்டேன் !
பல பிறப்புகள்
பிறந்துவிட்டேன் !
பல இறப்புகள்
அடைந்துவிட்டேன் !
இன்னும் பக்குவம்
வரவில்லை !
இன்னும் வைராக்கியம்
வரவில்லை !
இன்னும் ஆசை
விடவில்லை !
இன்னும் அகம்பாவம்
அடங்கவில்லை !
இன்னும் சுயநலம்
அழியவில்லை !
அரங்கத்தில் படுத்திருக்கும்,
அரங்கனுக்கும்
என் நிலை தெரியவில்லை !
அடியேனைக் காக்கும்
இராமானுசனை அடைய
எனக்கும் வழியில்லை !
திருவரங்கத்து அமுதனாரே !
இந்த நாயேனையும்,
உடையவரின் சொத்தாக
ஆக்கிவிடுமய்யா !
என்னிடம் உமக்குத் தர
ஏதுமில்லை...
உயிரைத் தவிர...
அதை உம் திருவடியில்
சமர்ப்பிக்கிறேன் !
இந்த ஜீவனை
ராமானுஜன்
என்னும் கருணைக் கடலில்
கரைத்துவிடுமய்யா !
காரேய் கருணை இராமனுசன் கருணையை
உம்மை விட அறிந்தவர் யார்...
இந்த ஸ்ரீரங்கத்திலே !!!
இந்த வையகத்திலே !!!
முதல் முறையாய்,
ஸ்ரீரங்கத்தில்,
உம்மை நினைத்து,
நுழைந்துவிட்டேன்...
இனி உம் பொறுப்பு....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக