ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 மார்ச், 2017

மரம் நட விரும்பு !

மனிதர்கள் அதிகமானால்,
வறட்சி...
பஞ்சம்...
வஞ்சம்...
பொறாமை...
ஏமாற்றம்...
துரோகம்...
கொலை...
கொள்ளை...
சுயநலம்...
பூமி வெப்பமாதல்...
செயற்கை உரங்கள்...
காற்றில் மாசு...
இயந்திர இரைச்சல்...
நெரிசல்...
பலவீனம்...
மண் சுரண்டல்...
ரசாயண மருந்துகள்...
நதிகள் சாக்கடை...
பிளாஸ்டிக் அரக்கன்...
அசுர ராஜ்யம்...
நிம்மதியின்மை...
களைப்பான காலை...
மந்தமான மாலை...
நொந்த இரவு...

மரங்கள் அதிகமானால்...
நல்ல நிழல்...
வாசமுள்ள மலர்கள்...
சத்தான காய்கள்...
சுவையான பழங்கள்...
சுத்தமான காற்று...
காலத்தே மழை...
உலகில் பசுமை...
ஆனந்த வாழ்வு...
பலமான ஆரோக்கியம்...
மண் வளம்...
இயற்கை உரங்கள்...
ஆறுகளில் நீர்...
பறவைகளின் கானம்...
தெய்வத்தின் ராஜ்யம்...
நிம்மதியான மனது...
கூட்டு வாழ்க்கை...
குதூகலமான காலை...
மயக்கும் மாலை...
குளிர்ந்த இரவு...

எந்த விதத்தில் பார்த்தாலும்,
மனிதரை விட மரங்களே உயர்ந்தது...

இறைவா...
மரத்தைப் படைத்து மகிழ்ந்த நீ...
மனிதரைப் படைத்து
நொந்தாயோ....

ஆறரிவு மனிதரைக் காக்க,
ஓரறிவு மரங்கள் உள்ளன...

ஆனால் ஆறரிவு மனிதரிடம் இருந்து,
மரங்களைக் காக்க,
இறைவா, உன்னை விட்டால் யார் உண்டு ?!?

காடுகள்...தெய்வங்கள்...
வணங்குவோம்...
காடுகள்...குழந்தைகள்...
வளர்ப்போம்...
காடுகள்...நண்பர்கள்...
உறவாடுவோம்...
காடுகள்...ஆசான்கள்...
தொழுவோம்...
காடுகள்...பெற்றோர்கள்...
மதிப்போம்...
காடுகள்...வாழ்க்கை...
நேசிப்போம்...

இன்று உலக காடுகள் தினம்...
ஒரு மரம் நடுவோம்...

மரம் நட விரும்பு...
மரம் காக்க விரும்பு...

மரத்தை மறவாதே...
மனிதா...
மரம் நம் அறம்...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP