ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 26 மார்ச், 2017

வடுகா !!!

வடுகா...வடுகா...வடுகா...

வடுகா... நீயே சிஷ்யன்...
வடுகா...நீயே ரசிகன்...
வடுகா...நீயே தாசன்...
வடுகா...நீயே புத்திமான்...
வடுகா...நீயே சக்திமான்...
வடுகா...நீயே வல்லவன்...
வடுகா...நீயே நல்லவன்...
வடுகா...நீயே தெளிந்தவன்...
வடுகா...நீயே புரிந்தவன்...
வடுகா...நீயே உணர்ந்தவன்...
வடுகா...நீயே ஜெயித்தவன்...
வடுகா...நீயே நிரூபித்தவன்...
வடுகா...நீயே யதார்த்தமானவன்...
வடுகா...நீயே செல்வன்...
வடுகா...நீயே பாக்கியவான்...

வடுகா...
எத்தனை முறை ஸ்வாமி ராமானுஜர் உன்னை இப்படிக் கூப்பிட்டிருப்பார் !!!

வடுகா...
உமக்குத் தோற்றோம் என ஸ்வாமி ராமானுஜர் ஒத்துக்கொண்டது உன்னிடமே !!!

வடுகா...
ரங்கராஜன் வேண்டாம்,
யதிராஜன் போதும் என
உன்னால் மட்டுமே சொல்லமுடியும் !!!

வடுகா...
கூரத்தாழ்வானையும்,
முதலியாண்டானையும்,
"இரு கரையார்" எனப் பரிகசிக்க உன்னால்தான் முடியும் !!!

வடுகா...
உம் பெருமாளை சேவிக்க வந்தால்,
எம் பெருமாளுக்கு பால் பொங்கும் என உன்னால் மட்டுமே பதிலளிக்க முடியும் !

வடுகா...
ராமானுஜரின் பாதுகையும்,
ராமானுஜரின் பெருமாளும்,
சமமே என ராமானுஜரிடம் வாதாட உன்னால்தான் முடியும் !

வடுகா...
ராமானுஜரின் நாமம்,
நாராயண நாமத்தை விட,
உயர்ந்தது என உணர்ந்தது நீ மட்டுமே !!!

வடுகா...
அனந்தபத்மநாபனையும்,
புரி ஜகந்நாதனையும்,
மிரட்ட உன்னால்தான் முடியும் !!!

வடுகா...
உன் பெருமை யாரறிவார்...
திருக்குறுங்குடி நம்பியும்,
உன் ரூபம் தரித்தே,
ராமானுஜருக்கு கைங்கரியம் செய்தான் !!!

வடுகா... வடுகா... வடுகா...
ஹே வடுக நம்பி...
உன்னை நம்பி...
இந்த ஏழை...

உன்னைப்போல்
ராமானுஜ சொத்தாக
என்னை மாற்றிவிடு...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP