உறங்குவதில்லை !
விதைத்தவன்
உறங்கினாலும்,
விதைகள்
உறங்குவதில்லை !
படைப்புகள்
உறங்கினாலும்,
படைத்தவன்
உறங்குவதில்லை !
சிஷ்யர்கள்
உறங்கினாலும்,
குரு உபதேசம்
உறங்குவதில்லை !
இமைகள்
உறங்கினாலும்,
இதயங்கள்
உறங்குவதில்லை !
கண்கள்
உறங்கினாலும்,
காலங்கள்
உறங்குவதில்லை !
உணர்வுகள்
உறங்கினாலும்,
இயற்கை
உறங்குவதில்லை !
உண்டவர்
உறங்கினாலும்,
உணவு
உறங்குவதில்லை !
செய்தவர்
உறங்கினாலும்,
செயல்கள்
உறங்குவதில்லை !
ஜபிப்பவன்
உறங்கினாலும்,
ஜபங்கள்
உறங்குவதில்லை !
உடல்
உறங்கினாலும்,
உயிர்
உறங்குவதில்லை !
ஆழ்கடல் ஜீவராசிகள்
உறங்கினாலும்,
அலைகள்
உறங்குவதில்லை !
பூமியிலிருப்பவர்
உறங்கினாலும்,
பூமி
உறங்குவதில்லை !
சுவாசிப்பவர்
உறங்கினாலும்,
காற்று
உறங்குவதில்லை !
சந்திரன்
உறங்கினாலும்,
சூரியன்
உறங்குவதில்லை !
உறவினர்கள்
உறங்கினாலும்,
உறவுகள்
உறங்குவதில்லை !
எழுதியவர்
உறங்கினாலும்,
எழுத்துக்கள்
உறங்குவதில்லை !
தலையே
உறங்கினாலும்,
தலை விதி
உறங்குவதில்லை !
நம்பியவர்
உறங்கினாலும்,
நம்பிக்கை
உறங்குவதில்லை !
மருத்துவர்
உறங்கினாலும்,
மருந்துகள்
உறங்குவதில்லை !
நினைவுகள்
உறங்கினாலும்,
நிமிடங்கள்
உறங்குவதில்லை !
உலகமே
உறங்கினாலும்,
மேகங்கள்
உறங்குவதில்லை !
ஆள்பவர்
உறங்கினாலும்,
ஆண்டவன்
உறங்குவதில்லை !
பக்தர்
உறங்கினாலும்,
பக்தி
உறங்குவதில்லை !
ஞானி
உறங்கினாலும்,
ஞானம்
உறங்குவதில்லை !
அன்பர்
உறங்கினாலும்,
அன்பு
உறங்குவதில்லை !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக