ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஏப்ரல், 2017

உறங்குவதில்லை !

விதைத்தவன்
உறங்கினாலும்,
விதைகள்
உறங்குவதில்லை !

படைப்புகள்
உறங்கினாலும்,
படைத்தவன்
உறங்குவதில்லை !

சிஷ்யர்கள்
உறங்கினாலும்,
குரு உபதேசம்
உறங்குவதில்லை !

இமைகள்
உறங்கினாலும்,
இதயங்கள்
உறங்குவதில்லை !

கண்கள்
உறங்கினாலும்,
காலங்கள்
உறங்குவதில்லை !

உணர்வுகள்
உறங்கினாலும்,
இயற்கை
உறங்குவதில்லை !

உண்டவர்
உறங்கினாலும்,
உணவு
உறங்குவதில்லை !

செய்தவர்
உறங்கினாலும்,
செயல்கள்
உறங்குவதில்லை !

ஜபிப்பவன்
உறங்கினாலும்,
ஜபங்கள்
உறங்குவதில்லை !

உடல்
உறங்கினாலும்,
உயிர்
உறங்குவதில்லை !

ஆழ்கடல் ஜீவராசிகள்
உறங்கினாலும்,
அலைகள்
உறங்குவதில்லை !

பூமியிலிருப்பவர்
உறங்கினாலும்,
பூமி
உறங்குவதில்லை !

சுவாசிப்பவர்
உறங்கினாலும்,
காற்று
உறங்குவதில்லை !

சந்திரன்
உறங்கினாலும்,
சூரியன்
உறங்குவதில்லை !

உறவினர்கள்
உறங்கினாலும்,
உறவுகள்
உறங்குவதில்லை !

எழுதியவர்
உறங்கினாலும்,
எழுத்துக்கள்
உறங்குவதில்லை !

தலையே
உறங்கினாலும்,
தலை விதி
உறங்குவதில்லை !

நம்பியவர்
உறங்கினாலும்,
நம்பிக்கை
உறங்குவதில்லை !

மருத்துவர்
உறங்கினாலும்,
மருந்துகள்
உறங்குவதில்லை !

நினைவுகள்
உறங்கினாலும்,
நிமிடங்கள்
உறங்குவதில்லை !

உலகமே
உறங்கினாலும்,
மேகங்கள்
உறங்குவதில்லை !

ஆள்பவர்
உறங்கினாலும்,
ஆண்டவன்
உறங்குவதில்லை !

பக்தர்
உறங்கினாலும்,
பக்தி
உறங்குவதில்லை !

ஞானி
உறங்கினாலும்,
ஞானம்
உறங்குவதில்லை !

அன்பர்
உறங்கினாலும்,
அன்பு
உறங்குவதில்லை !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP