ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 அக்டோபர், 2017

638. தமிழ் தலைவன் !

எங்கள் தமிழ் தலைவன்,
அன்பால் நாரணனை
அனுபவித்தவன்,
வந்துதித்த
ஐப்பசி அவிட்ட நாள் இன்று !

நாங்கள் கருப்பையில்
மீண்டும் பிறவாதிருக்க,
திருக்கடல் மல்லையில்,
ஞானத் தமிழன்
உதித்த நாள் இன்று !

அன்பையே அகலாய்,
ஆர்வமே நெய்யாய்,
நாராயணனுக்கு
ஞான விளக்கேற்றியவன்
உதித்த நாள் இன்று !

திருக்கோவலூரில்
இடைக்கழியில்
பொய்கையாழ்வாரோடு
அமர்ந்த பக்தன்
உதித்த நாள் இன்று !

மூவரில் ஒருவராய்,
மூவரில் நடுவராய்,
முதல்வனைக் கண்டு,
அன்பாய் விளக்கேற்றியவன்
உதித்த நாள் இன்று !

ஐம்பூதங்களை ஆளும்
ஐம்புலன்களை ஆளும்
மஹத்பூதமான நாரணனை
அனுபவித்த பூதத்தாழ்வார்
உதித்த நாள் இன்று !

திருக்கடல்மல்லை
பக்த சிகாமணியே !
காம பூதமாய்,
கோப பூதமாய்,
அஹங்கார பூதமாய்,
ஆசை பூதமாய்,
அலையும் என்னைத் திருத்தி
ஸ்தல சயனத்தான்,
திருவடியில் இப்போதே சேர்த்து
நீர் பூதத்தாழ்வார்
என்பதை நிரூபித்து விடுங்கள் !

©குருஜீ கோபாலவல்லிதாசர்

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP