640. மார்கழியே நீதானடி !
மார்கழி வந்ததோ !!!
மதி நிறைந்ததோ !!!
நீராட வந்தாயோ !!!
நீராட்ட வந்தாயோ !!!
சீர் மல்கியதோ !!!
ஆய்பாடி சிறந்ததோ !!!
கூர்வேல் நந்தகோபனோ !!!
ஏரார்ந்த கண்ணி யசோதையோ !!!
கார்மேனி செங்கண்ணனோ !!!
கதிர்மதியம் முகத்தனனோ !!!
நாராயணனும் நமக்கோ !!!
பறையும் நமக்கோ !!!
பாரோர் புகழ்வனரோ !!!
படிந்தே பாடுவோமோ !!!
ஆண்டாளும் வந்தாயே !!!
ஆளவே வந்தாயே !!
ஆட்கொள்ள வந்தாயே !!!
ஆடிப்பூரத்தில் வந்தாயே !!!
பூமகளாய் வந்தாயே !!!
பூவுலகிற்காய் வந்தாயே !!!
கலியுகத்தில் வந்தாயே !!!
கவலை தீர்க்க வந்தாயே !!!
மார்கழியே நீதானடி !!!
மாதவனும் உனக்காகதானடி !!!
மந்திரமே திருப்பாவையடி !!!
மகிழ்ச்சியும் தந்ததடி !!!
சோம்பேறிகள் நாங்களடி !!!
சுய சிந்தனை இல்லையடி !!!
கோதையே உன் திருவடியே....
கதியெனவே வந்தோமடி...
உன்னிடமே இருக்கவேண்டுமடி...
உன் கை கிளியாய் ஏற்பாயடி !!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக