ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

Search This Blog

Loading...

Thursday 16 February 2012

விட்டுக்கொடு . . .

ராதேக்ருஷ்ணா

விட்டுக்கொடு . . .

விட்டுக்கொடுத்தவர்கள்
கெட்டுப்போனதில்லை . . .


சில இடங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில பேரிடம்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில விஷயங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில சந்தர்ப்பங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


சில காரியங்களில்
விட்டுக்கொடுக்கலாம் . . .


விட்டுக்கொடுப்பதால்
நீ வாழ்வில் உயர்ந்துகொண்டேயிருக்கிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ பெருமை அடைகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ பலம் பெறுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ ஆசிர்வாதம் பெறுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ பக்குவப்படுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ அடுத்தவரை கடனாளியாக்குகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ அதிகம் பெறுகிறாய் !


விட்டுக்கொடுப்பதால்
நீ இன்பம் அடைகிறாய் !

கொஞ்சம் விட்டுக்கொடுத்துப் பார் !

உன் அன்பு எல்லைகளைக் கடக்கும் !

 
 

Read more...

Wednesday 15 February 2012

மன்னிப்புக் கோருகிறேன் . . .


ராதேக்ருஷ்ணா


க்ருஷ்ணா . . .
உன்னிடம் ஒரு வேண்டுகோள் !

நான் தெரிந்து பலரின்
மனதைப் புண்படுத்தி இருக்கிறேன் !
 அவர்கள் மனதிற்கு
சமாதானம் தா . . .

நான் தெரியாமல் பலரின்
நெஞ்சை காயப்படுத்தி இருக்கிறேன் !
அவர்கள் நெஞ்சத்திற்கு
ஆறுதல் தா . . .

நான் என் உடலால்
சிலருக்குக் கஷ்டம் கொடுத்திருக்கிறேன் !
அவர்கள் உடலுக்கு
இதம் தா . . .

நான் என் மனதால்
சிலருக்குக் கஷ்டம்
நினைத்திருக்கிறேன் !
அவர்களுக்கு நிம்மதி தா . . .


க்ருஷ்ணா . . .
என்னால் கஷ்டம் அடைந்த
அனைத்து ஜீவர்களிடம்
நான் என் மனதார
மன்னிப்புக் கோருகிறேன் . . .


உனக்குத் தெரியும் !
என்னால் துன்பம்
அனுபவித்தவர்கள் அனைவரையும் !


இனி என்னால் ஒரு
ஜீவனுக்கும்
ஒரு துன்பம் நேரக்கூடாது !


தயவு செய்து
நான் யாருக்கும் கஷ்டம்
தராமல் இருக்கும்படியாக
இருக்க நீ ஆசிர்வாதம் செய் !


க்ருஷ்ணா . . .
மன்னித்து விடு  . . .


உன் குழந்தைக்கு
உன்னிடம் மன்னிப்புக்
கேட்பதைத் தவிர
இந்த வாழ்வில் வேறு
எதுவும் உருப்படியாகச்
செய்யத்தெரியாது ! ! !

 

Read more...

Monday 13 February 2012

கலங்காமல் நிதானமாயிரு . . .

ராதேக்ருஷ்ணா
மாற்றமே இல்லாதது
மாற்றம் . . .
மாற்றவே முடியாதது
மாற்றம் . . .
தவிர்க்க முடியாதது
மாற்றம் . . .
உலகில் நிரந்தரமானது
மாற்றம் . . .

காலத்தினால் மாறாதது
மாற்றம் . . .


பணத்தினால் மாற்றமுடியாதது
மாற்றம் . . .


புத்தியினால் தவிர்க்கமுடியாதது
மாற்றம் . . .


மாற்றம் என்ற ஒன்றுதான்
உலகில் தினமும்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது !


அதனால் நீ தைரியமாக இரு !


உன் வாழ்விலும்
ஒரு நல்ல மாற்றம்
நடந்துகொண்டிருக்கிறது !


நிச்சயம் நீ எதிர்பார்க்கும்
நல்லமாற்றம்
ஒரு நாள் வரும் !


தேவையில்லாத கெட்டவைகள்
நல்லவைகளாக மாறும்
காலம் தூரத்திலில்லை !


அதனால் நீ உன் மனதை
நல்வழியில் மாற்றிவிடு . . .


மற்றவை மாறும் . . .


கலங்காமல் நிதானமாயிரு . . .




Read more...

Saturday 11 February 2012

முதியோர் இல்லம் . . .

ராதேக்ருஷ்ணா
முதியோர் இல்லம் . . .

உலகிலே ஒரு நரகம் . . .
 அதுதான் முதியோர் இல்லம் . . .

 
வயதானவர்களை
தண்டிக்கும் ஒரு நரகம் . . .


பெற்றபிள்ளைகளே
பெற்றோரை தண்டிக்கும் ஒரு நரகம் . . .

தூக்கி வளர்த்தவர்களை
வளர்க்கப்பட்டவர்களே
தள்ளிவிடும் ஒரு நரகம் . . .
ஆலமரத்தை விழுதுகளே
ஒதுக்கிவைக்கும் ஒரு நரகம் . . .


உண்ணும்,உடையும்,உறைவிடமும்
தந்தவர்களை உறவுகளே
உதாசீனமாய் வைக்கும் ஒரு நரகம் . . .


கருவறையில் சுமந்தவளை,
சும்மாய் கிட என்று சிசுவே
சிறை வைக்கும் ஒரு நரகம் . . .
நெஞ்சில் சுமந்த தகப்பனை
பிள்ளையே வஞ்சித்து வைத்து
தனிமைப்படுத்தும் ஒரு நரகம் . . .
தாலாட்டு பாடினவளை
வாயார வைது பிள்ளைகளே
தவிக்கவைக்கும் ஒரு நரகம் . . .


தொப்புள்கொடி வழியாக
உணவு,உதிரம்,உயிர்,உடல்
தந்தவளுக்கு மனதில் பாரம்
தந்து நடைப்பிணமாய்
மாற்றும் ஒரு நரகம் . . .


உச்சி முகந்தவளின் எச்சில்
கசந்து அறுவருப்பாகி
உயிரோடு பாடையிலேற்றும்
ஒரு நரகம் முதியோர் இல்லம் . . .


கேட்டதையெல்லாம் தந்த
முட்டாள் தகப்பனை
அறிவு ஜீவி குழந்தைகள்
அஹம்பாவத்தால் தள்ளி
வைக்கும் ஒரு நரகம் . . .


ஐயோ . . .
முதியோர் இல்லங்கள்
இல்லாமல் போகட்டும் . . .


முதியோர் இல்லங்கள்
இருப்பதால்தானே
இந்தப் பாவிகள் பெற்றோர்களை
பாடாய்படுத்துகிறார்கள் . . .

 
வயதான காலத்தில் வேண்டுவது
வெறும் உடலில் சௌகரியம் மட்டுமல்ல !


இளவயதில் தான் தன்
குழந்தைகளுக்குத் தந்த
அன்பை திரும்பவும் அனுபவிக்கவே
வயதானவர்கள் வேண்டுவது !


அன்பைத் தராத இந்தப் பாவிகள்
தாயையும் தந்தையையும்
விஷம் தந்து கொன்றுவிடலாம் . . .



க்ருஷ்ணா . . .
பெற்றோரை முதியோர் இல்லங்களில்
விடும் மஹாபாபிகளை
இங்கேயே,இப்போதே தண்டித்துவிடு !



பெற்றோரை முதியோர் இல்லங்களில்
தள்ளிவிடும் பாபிகளுக்கு
வயதான காலத்தில் எல்லா
கஷ்டங்களும் வந்து சேரும் . . .



இது சாபமல்ல . . .
இது சத்தியம் . . .

இது புலம்பலல்ல  . . .
இது இயற்கையின் சட்டம் . . .

இது கோபமல்ல . . .
இது தர்ம சாஸ்திரம் . . .



Read more...

Friday 10 February 2012

என் வாழ்க்கை . . .

ராதேக்ருஷ்ணா
 
என் வாழ்க்கை !

என் வாழ்க்கை
என்னை நேசிக்கிறது !

என் வாழ்க்கை
என்னை மதிக்கிறது !

என் வாழ்க்கை
என்னை கொண்டாடுகிறது !

என் வாழ்க்கை
என்னை ரசிக்கிறது !

என் வாழ்க்கை
என்னை கொஞ்சுகிறது !

என் வாழ்க்கை
என்னை உயர்த்துகிறது !

என் வாழ்க்கை
என்னை பக்குவப்படுத்துகிறது !

என் வாழ்க்கை
எனக்கு உதவுகிறது !

என் வாழ்க்கை
எனக்கு நம்பிக்கை அளிக்கிறது !

என் வாழ்க்கை
என்னை ஆசிர்வாதிக்கிறது !

என் வாழ்க்கை
என்க்கு உதவுகிறது !

என் வாழ்க்கை
என்னிடம் விளையாடுகிறது !

என் வாழ்க்கை
எனக்கு அறிவைத் தருகிறது !

என் வாழ்க்கை
என்னுடன் இருக்கிறது !

என் வாழ்க்கை
எனக்கு பலம் தருகிறது !

என் வாழ்க்கை
எனக்கு சொல்லிக்கொடுக்கிறது !

என் வாழ்க்கை
என்னோடு இருக்கிறது !

என் வாழ்க்கை
என் பலம் . . .

என் வாழ்க்கை
என் தனம் . . .

என் வாழ்க்கை
என் வெற்றி . . .

என் வாழ்க்கை
என்னிடம் நம்பிக்கை வைக்கும்போது
நான் ஏன் என் வாழ்க்கையின் மேல்
நம்பிக்கை வைக்கக்கூடாது ? ! ?

என் வாழ்க்கை
என்னை ரசிக்கும்போது
நான் ஏன் என் வாழ்க்கையை
ரசிக்கக்கூடாது ? ! ?

என் வாழ்க்கை
என்னிடம் அக்கறையோடு
நடக்கும்போது,
நான் ஏன் என் வாழ்க்கையில்
அக்கறை கொள்ளக்கூடாது ? ! ?

யார் வேண்டுமானாலும்,
என்ன வேண்டுமானாலும்,
சொல்லட்டும் . . . நினைக்கட்டும் !

என் வாழ்க்கை என்னுடைய வாழ்க்கை !

அதை நான் வாழ்ந்தே தீருவேன் . . .

என் வாழ்வே உனக்கு நன்றி  . . .

நீயும் உன் வாழ்க்கையை ரசி . . .

நீயும் உன் வாழ்க்கையை அனுபவி . . .

நீயும் உன் வாழ்க்கையை மதி . . .

நீயும் உன் வாழ்க்கையை உபயோகப்படுத்து !



Read more...

apture...

About This Blog

chitika mobile

About

Radhekrishna Sath Sangam... The Secured Sacred Spiritual Journey... Join with us to change the world... Let us enjoy the real Spirituality...

Work At Home | Free Traffic

There was an error in this gadget

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP