ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 30 மே, 2021

648. திருக்கச்சிநம்பிகள்

🙏🕉️🛕🐚📿👣❤️🪔🇮🇳

*ஆனந்தவேதம் !*

_648. திருக்கச்சி நம்பிகள் !_

கண்ணனுக்காக
பூந்தோட்டம் 
வைத்தான்
மாலாகாரர் சுதாமா !

அரங்கனுக்காக
பூந்தோட்டம்
அமைத்தார்
தொண்டரடிப்பொடியாழ்வார் !

வரதனுக்காக
*பூந்தோட்டம்*
சமைத்தார்
திருக்கச்சிநம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

அரங்கனிடம்
பேசினான்
ராமன் !

ஆராவமுதனிடம்
பேசினார்
திருமழிசையாழ்வார் !

வரதனிடம்
*பேசினார்*
திருக்கச்சிநம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

ராமனுக்கு
சாமரம்
வீசினான்
சத்துருக்கனன் 
அயோத்தியில் !

பலராமனுக்கு
விசிறி வீசினான்
கண்ணன்
விருந்தாவனத்தில் !

வரதனுக்கு
*விசிறி வீசினார்*
திருக்கச்சிநம்பிகள்
காஞ்சியில்...

🕉️🛕🐚📿👣🪔❤️

வசிஷ்டருக்கு
சிஷ்யன் ஆனான்
ராமன் !

சாந்தீபனிமுனிக்கு
சிஷ்யன் ஆனான்
க்ருஷ்ணன் !

திருக்கச்சி நம்பிக்கு
*சிஷ்யன் ஆனான்*
வரதன்...

🕉️🛕🐚📿👣🪔❤️

ரிஷிகள் வீட்டில்
உணவருந்தினான்
ராமன் !

விதுரன் வீட்டில்
கூழ் குடித்தான்
கண்ணன் !

ராமானுஜர் வீட்டில்
*ஆகாரம் உண்டார்*
திருக்கச்சி நம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

பிராட்டியிடம்
தூதுசென்றார்
ஆஞ்சநேயர்
ஸ்ரீராமானுக்காக !

திருதராஷ்டிரனிடம்
தூது சென்றான்
கண்ணன்
பாண்டவருக்காக !

வரதராஜனிடம்
*தூது சென்றார்*
திருக்கச்சிநம்பிகள்
ராமானுஜருக்காக....

🕉️🛕🐚📿👣🪔❤️

நாராயணன்
சொன்னதை
தேவருக்குச்
சொன்னார்
பிரம்மா !

கண்ணன்
சொன்னதை
கோபியருக்கு
சொன்னான்
உத்தவன் !

வரதன்
சொன்னதை
*ராமானுஜருக்கு*
சொன்னார்
திருக்கச்சி நம்பிகள்...

🕉️🛕🐚📿👣🪔❤️

ஞானத்திற்காக
மாடு மேய்த்தான்
சத்யகாம ஜாபாலன் !

ஆசைக்காக
மாடு மேய்த்தான்
ஆயர்குலக் கண்ணன் !

ஆசார்யனுக்காக
மாடு மேய்த்தார்
*திருக்கச்சி நம்பிகள்...*

🕉️🛕🐚📿👣🪔❤️

திருக்கச்சி நம்பிகளே...
உம்மைப்போலே,
வரதனோடு பேச,
ராமானுஜரோடு வாழ,
அகம்பாவம் இல்லாமல் இருக்க,
அடியேனுக்கு அருள் செய்வீர்....

© அடியேன்
கோபாலவல்லிதாசன்
21.2.21, ஞாயிறு

🪔❤️👣📿🐚🛕🕉️🇮🇳

Read more...

650. ப்ரியதர்ஷினி

🇮🇳📿🐘🐚🏹🛕🕉️🙏🏼

🌱✒️ *ஆனந்தவேதம்*💧🔥

*650. ப்ரியதர்ஷினி !*

போய் வா பிரியதர்ஷினியே !!!!

உன்னுடைய பிரிய தர்சனம் இனி இந்தப் பூமியில் எனக்கில்லை !

பேரிகை சுமந்து நீ
என் பத்மநாபன் முன்
ஆடி ஆடி வரும்போது 
நான் உள்ளே குதூகலித்தது நீ அறிவாயே...

உன் முதுகில் அமர்ந்து பத்மநாபனுக்கு பேரிகை
வாசிக்க நான்
ஆசைப்பட்டது நீ அறிவாயே...

வேட்டை ஆராட்டு சமயத்தில், நீ வெளிவரும் அழகைப் பார்த்தபோது நான்
குழந்தையாய் ஆனது நீ அறிவாயே...

உன்னை நான் சேவித்தபோதெல்லாம் 
என்னை நீ அழகாய்
ஆசீர்வதிப்பாயே...

உன் முகத்தில் 
முத்துச்சட்டையாய்,
ஒரு ஜன்மாவில் நீ என்னை வைத்துக்கொள்வாய்...

உன்னை எல்லோரும் பார்த்தனர். உன்னை பத்மநாபன் ரசித்ததை
நான் பார்த்தேன்...

நீ பத்மநாபனுக்கு 
ப்ரியதர்ஷினி...
நீ குழந்தைகளுக்கு
ப்ரியதர்ஷினி...
நீ தேவர்களுக்கு
ப்ரியதர்ஷினி...

நான் கஜேந்திரன் கதை படித்திருக்கிறேன் ; கேட்டிருக்கிறேன் ; சொல்லியிருக்கிறேன்.

ஆனால் நான் பார்த்த பக்தப்ரிய கஜராணி
நீ மட்டுமே....

எத்தனை உற்சவத்தில் பத்மநாபனின் பேரிகை
சுமந்திருப்பாய்....

எத்தனை வேட்டை,
எத்தனை ஆராட்டு,
எத்தனை லக்ஷதீபம்
பார்த்திருப்பாய்...

நீயல்லவோ பத்மநாபனின் சொத்து...
நீ பத்மநாபன் கோயிலில் பிரசாதம் சாப்பிடும் அழகை அனந்தபத்மநாபன் எப்படியெல்லாம் ரசித்தான் !!!

பத்மநாபன் கோயிலில்,
நான் வலம் வரும்போதெல்லாம்,
தென்மேற்கு திசையில்,
உன்னைத் தானே நினைப்பேன்...

திசையில்லா வைகுண்டத்திலும்,
தென்மேற்கு திசையில்,
அனந்தபத்மநாபனின்
உற்சவத்திற்காக இனி நிற்பாயோ ?!?

அங்கும் பேரிகையை
சுமப்பாயா ?!
அங்கும் உன்னைப் பார்த்து, வைகுண்டவாசிகள் "ஹொய் ஹொய்...ஹொய் ஹொய் ஹொய்..." என்று குழந்தைகளாய் குதிப்பரோ...

இனி வைகுண்டம் பாக்கியம் பெற்றது...

ஒரு நாள் நானும் வருவேன் வைகுண்டம்...
அங்கே வந்து உன்னை
மீண்டும் இங்கே,
திருவனந்தபுரம்
அழைத்துவருவேன்...

அதுவரை...
இந்த பத்மநாபதாசனை மறவாதே...
நான் என்ன பத்மநாபதாசன்...
நீ தான் பத்மநாபதாசி...

எதோ ஒரு கண்ணனின் கோபிதான் நீ...
இல்லையென்றால் இத்தனை வருடம் அனந்தபத்மநாபன் தன்னருகே யாரை இப்படி வைத்திருந்தான்...?!

ஹே கஜராணி...
ஹே பத்மநாப ப்ரியே...

போய் வா...
சீக்கிரம் வா...

நீயில்லாமல்
நம் பத்மநாபன் இளைத்துவிடுவான்...

அதனால் உடனேயே
நம் திருவனந்தபுரத்திற்கு,
உன் பத்மநாபனுக்காக
வந்துவிடு...

உனக்காக
பத்மநாபனோடு
தென்மேற்கு மூலையில்
நான் காத்திருக்கிறேன்...

©குருஜீ கோபாலவல்லிதாசன்...
30.5.21, ஞாயிறு

🙏🏼🕉️🛕🏹🐚📿🇮🇳🐘

Read more...

புதன், 26 மே, 2021

649. சந்திரசேகரா...

சந்திரசேகரா...
வைகாசி பெற்ற விந்தை நீ...

சந்திரசேகரா...
அனுஷம் பெற்ற அற்புதம் நீ...

சந்திரசேகரா...
காஞ்சி பெற்ற கருணை நீ...

சந்திரசேகரா...
அத்வைதம் பெற்ற அருந்தவம் நீ...

சந்திரசேகரா...
சன்னியாசம் பெற்ற சன்மானம் நீ...

சந்திரசேகரா...
மானுடம் பெற்ற மகான் நீ...

சந்திரசேகரா...
கலியுகம் பெற்ற பாக்கியம் நீ...

சந்திரசேகரா...
வேதம் பெற்ற வித்தை நீ...

சந்திரசேகரா...
சரஸ்வதி பெற்ற சத்பாத்திரம் நீ...

சந்திரசேகரா...
நாத்திகம் பெற்ற சிம்மசொப்பனம் நீ...

சந்திரசேகரா...
தமிழ் பெற்ற தனம் நீ...

சந்திரசேகரா...
நான் பெற்ற பாக்கியம் நீ...

சந்திரசேகரா...
நீர் மஹாபெரியவா தான்...
ஆனாலும் என்றும் என் செல்லம்தான்...

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP