ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

யாரோ...இந்த பிள்ளை...

முச்சந்தி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

அரச மரம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

ஆத்தங்கரை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

குளத்தங்கரை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

மஞ்சள் பொடி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

களிமண் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கண் திருஷ்டி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கருப்பு எரும்பு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கன்னி மூலை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

அருகம்புல் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

எருக்கம்பூ என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

தேங்காய் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மாம்பழம் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

கொழுக்கட்டை என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

சுண்டல் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

அப்பம் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

கரும்பு என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மஹாபாரதம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

யானை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

சதுர்த்தி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

குடை என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மூஞ்சூறு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

பசுஞ்சாணம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

வெள்ளெருக்கு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

சுழி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

யாரோ !?!
இந்த பிள்ளை
யாரோ !?!

இவரே பிள்ளையாரோ !!!

சங்கடங்கள் நீக்க
சதுர்த்தியில்
வந்த பிள்ளையே !!!

சிவனையும் எதிர்த்து,
தாய் சொல்லைக் காக்க
வந்த பிள்ளையே !!!

அம்மையப்பனே உலகம்
என எல்லோருக்கும் சொல்ல
வந்த பிள்ளையே !

எல்லோருக்கும் பிள்ளையே !!!
சமத்துப்பிள்ளையே !!!
கொழுக்கு மொழுக்கு பிள்ளையே !!!
கொழுக்கட்டை பிள்ளையே !!!

ஊரும் உலகமும்
கொண்டாடும் பிள்ளையே !!!

தொந்திப்பிள்ளையே !!!
தந்தப்பிள்ளையே !
பிள்ளைகள் கொண்டாடும்
பிள்ளையே !!!

வா !
வா !
உனக்காகவே
நாங்கள்
ஆசை ஆசையாய்
காத்திருக்கிறோம் !

அப்பம், பழம், கரும்பு...
கூடவே எங்கள் அன்பும்...
உனக்காகவே....

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP