ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 அக்டோபர், 2012

ராச பௌர்ணமி !

ராதேக்ருஷ்ணா



சரத் பூர்ணிமா . . .

சரத் கால பௌர்ணமி !


கண்ணனுக்குப் பிடித்த
விசேஷமான பௌர்ணமி !


கோபிகைகளின் எண்ணங்கள்
பலித்த பௌர்ணமி !


தேவர்களும் கண்டு
அதிசயித்த பௌர்ணமி !


பக்தர்கள் அனைவரும்
ஏங்கும் பௌர்ணமி !


மஹாத்மாக்கள் எல்லோரும்
கொண்டாடும் பௌர்ணமி !


பரமாத்மா ஜீவாத்மாவிற்கு
தன்னையே தரும் பௌர்ணமி !


 ஜீவாத்மா பரமாத்வாவில்
கரைந்து போகும் பௌர்ணமி !


பக்தியின் எல்லையான
ப்ரேமைக்கு ஒரு பௌர்ணமி !


ராதிகா ராணியின் தாபம்
தீர்த்த பௌர்ணமி !


அஷ்ட சகிகளின் ஆனந்தம்
எல்லை கடந்த பௌர்ணமி !


ப்ருந்தாவனமே வசப்பட்டு
மயங்கிக் கிடக்கும் பௌர்ணமி !


சிவபெருமானும் தவமிருந்து
ஆசைப்படும் பௌர்ணமி !


ராசக்ரீடையில் கண்ணனை
அனுபவிக்க ஒரே பௌர்ணமி !


சந்திரனும் க்ருஷ்ண சந்திரனின்
காதலியாய் மாறும் பௌர்ணமி !


ஜயதேவர் அஷ்டபதியின்
ரஹஸ்ய அர்த்த பௌர்ணமி !


ஆண்டாளின் நாச்சியார் திருமொழி
காதல் அர்த்த பௌர்ணமி !


அத்தனை கோபிகைகளுக்கும்
தன்னைத் தனித் தனியாக
கண்ணன் தன்னைத் தந்த பௌர்ணமி !


கோபிகைகளின் இஷ்டப்படி எல்லாம்
கண்ணன் சேவை செய்த பௌர்ணமி !


ராதிகா ராணியை மட்டும்
ஏகாந்தமாய் கண்ணன்
அழைத்துச் சென்ற பௌர்ணமி !


கோபிகைகள் அஹம்பாவம்
அழிந்து கதறியழுது கண்ணனுக்காக
கோபிகா கீதம் பாடின பௌர்ணமி !


கண்ணனும் சாக்ஷாத்
மன்மத மன்மதனாக
அலங்கரிந்து வந்த பௌர்ணமி !


அர்த்த ராத்திரியில் கண்ணன்
கோபிகா ஸ்த்ரீகளோடு
ப்ருந்தாவனத்தை வலம் வந்த
சுற்றுலா பௌர்ணமி !


அழகான யமுனையில்,
கண்ணனும் கோபிகைகளும்
ஜலக்ரீடை செய்த
ஸ்ருங்கார பௌர்ணமி !


ஐப்பசியின் பௌர்ணமி...
ஆயாசம் தீர்க்கும் பௌர்ணமி !


சரத் காலமே நீ வாழ்க !
பௌர்ணமியே நீ வாழ்க !


ப்ருந்தாவனமே நீ வாழ்க !
சேவா குஞ்சமே நீ வாழ்க !


ராச லீலையே நீ வாழ்க !
ப்ரேமையே நீ வாழ்க !


ராதிகா ராணிக்கு ஜெய் !
க்ருஷ்ண ப்ரபுவுக்கு ஜெய் !


கோபிகா ஸ்த்ரீகளுக்கு ஜெய் !


ஒரு நாள் நாமும்
நம் கண்ணனோடு
சத்தியம் ராசம் ஆடுவோம் !


அதுவரை . . .

விடாமல் ஜபிப்போம் . . .

"ராதே க்ருஷ்ணா "


அதுவரை . . .
உரக்க ஜபிப்போம் . . .
"ராதேக்ருஷ்ணா"


அதுவரை . . .
உற்சாகமாய் ஜபிப்போம் . . .
"ராதேக்ருஷ்ணா"


அதுவரை . . .
உண்மையாய் பக்தி செய்வோம் . . .

அதுவரை . . .
குரு சொல்படி நடப்போம் . . .

அதுவரை . . .
இந்த பூமியில் இருப்போம் . . .


அதுவரை . . .
ஆனந்தவேதம் தொடரும் . . .


Read more...

வியாழன், 25 அக்டோபர், 2012

பெண்ணே ! பெண்ணே !


ராதேக்ருஷ்ணா...

பெண்ணே ! பெண்ணே !
நீ பகவானின் அதிசயமான சிருஷ்டி !


பெண்ணே ! பெண்ணே !
நீ உலகின் என்றும் மாறாத அச்சாணி !


பெண்ணே ! பெண்ணே !
நீ வம்சத்தை வாழ வைக்கும் ரஹஸ்யம் !


பெண்ணே ! பெண்ணே !
நீ இயற்கையின் அரிய  பொக்கிஷம் !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ அண்ட சராசரத்தின் விசேஷ சக்தி !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ தியாகத்தின் பூரணமான அர்த்தம் !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ உயிர்கள் அனைத்திற்கும் ஆனந்தம் !


பெண்ணே ! பெண்ணே !
நீ தெய்வத்தையும் தாங்கும் பலசாலி !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ ஆண்களை உற்பத்தி செய்யும் வித்து !


பெண்ணே ! பெண்ணே !
நீ எதிர்கால சந்ததியின் அஸ்திவாரம் !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ மகான்களையும் தரும் உந்து சக்தி !

 
பெண்ணே ! பெண்ணே !
உனக்கு தான் தெய்வமும் வசப்படும் !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ போகப் பொருளல்ல ! ! !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ பலவீன சாதியில்லை ! ! !


பெண்ணே ! பெண்ணே !
 நீ அழக்கூடாது !


பெண்ணே ! பெண்ணே !
நீ புலம்பக்கூடாது !


பெண்ணே ! பெண்ணே !
நீ உயர்ந்தவள் . . .


பெண்ணே ! பெண்ணே !
பெண்ணாய் பிறப்பது அரிதிலும் அரிது !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ என்றும் விசேஷமானவள் !

 
பெண்ணே ! பெண்ணே !
நீ என்றும் அற்புதமானவள் !


பெண்ணே ! பெண்ணே !
நீ என்றுமே உயர்ந்தவள் !
 

பெண்ணே ! பெண்ணே !
உனக்குத் தான் நவராத்திரி !

 
பெண்ணே ! பெண்ணே !
உனக்குத் தான் தங்கமும், வைரமும் !

 
பெண்ணே ! பெண்ணே !
உனக்குத் தான் பட்டும், பூவும் !

 
பெண்ணே ! பெண்ணே !
உனக்குத்தான் அழகும், அன்பும் !

 
பெண்ணே ! பெண்ணே !

கண்ணன் கீதையில் சொன்னான் !
உன்னுடைய அத்தனை உயர்ந்த
விஷயங்களும் அவன்தான் என்று ! ! !


அதனால் பெண்ணே ! பெண்ணே !
நீ தெய்வத்தின் ஒரு துளி !

பெண்ணே ! பெண்ணே !
நீ தெய்வப் பிறவி ! ! !

பெண்ணே ! பெண்ணே !
உனக்கு வந்தனம் ! ! !

ஆவதும் பெண்ணாலே...
அழிவதும் பெண்ணாலே...

ஆம்...சத்தியம்....
எல்லாம் நல்லவை ஆவதும் பெண்ணாலே...
எல்லா தீமைகளும் அழிவதும் பெண்ணாலே...

பெண்ணே ! பெண்ணே !
அதனால் சிவனும் தந்தான்
தன் மேனியில் சரிபாதி !

பிரமனும் தந்தான் தன்
நாவையே இருப்பிடமாக !

திருமாலும் தந்தான் தன்
திருமார்பில் நிவாசம் !


பெண்ணே ! பெண்ணே !
ஆஞ்சநேயனைப் பெற்ற அஞ்சனையும் உன்னைப் போல் பெண்தானே...


பெண்ணே ! பெண்ணே !
சங்கரனைப் பெற்ற ஆர்யாம்பாளும் உன்னைப் போல் பெண்தானே...


பெண்ணே ! பெண்ணே !
ராமானுஜரைப் பெற்ற
காந்திமதியும் உன்னைப் போல் பெண்தானே...


பெண்ணே ! பெண்ணே !
மத்வரைப் பெற்ற வேதவதியும் உன்னைப் போல் பெண்தானே...


பெண்ணே ! பெண்ணே !
க்ருஷ்ண சைதன்யரைப் பெற்ற சசிதேவியும் உன்னைப் போல் பெண்தானே...


பெண்ணே ! பெண்ணே !
உன் பெருமை சொல்ல
என்னால் ஆகாது !

பெண்ணே ! பெண்ணே !
நானும் ஒரு ஜன்மா
பெண்ணாய் பிறக்க
நீ ஆசீர்வாதம் செய்...


Read more...

செவ்வாய், 23 அக்டோபர், 2012

ஆஹா . . . ஆஹா . .

ராதேக்ருஷ்ணா

த்நாபா . . .

சுமாவேட்டையாடினாயா ? 

உன் பகர் எல்லோரையும் பார்ததாயா ?

துஷ்ம்ஹாரம் செயது விட்டாயா ? 

நான் மட்டும் ங்கில்லையே . . .

என் துக்கம் உனக்குத் தெரிந்துவிட்தே !

நான் உன்னை நினைப்து தானே ரி !

னால் ீ என்னை நினைதுக்கொணடாயே !

தற்கு நான் என் கைமாறு செய்வேன் ?

நான் உன்னுடைநாதை
விடாமல் பிப்னில்லையே ?

நான் உன்னுடை திரு மிகுந்
ந்புரிவாசி இல்லையே ?

 து திருடியில் மா
ணாதி செயனில்லையே ?

னக்காக எதையும் துளி
தியாகம் செயனில்லையே ?

பெரிவைராக்கிசாலி இல்லையே ?

நல்ஞானி இல்லையே ?

மாபகதன் இல்லையே ! ? !


யினும் நீ என்னை நினைத்துக்
 கொண்டாயே !


என்ன செய்வேன் என் பத்மநாபா !



இந்த குழந்தையின்  அழுகையை
மாற்றிவிட்டாயே !



நான் உன் குழந்தை என்பதை
  நிரூபித்துவிட்டாயே ! ! !



நான் பத்மநாபனின் குழந்தை !



ஆஹா . . . ஆஹா . . . . .



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP