ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 மே, 2012

என் அருமைக் குழந்தையே !

ராதேக்ருஷ்ணா


வாராய் . . .
என் அருமைக் குழந்தையே !
வாராய் . . .

உலகம் உய்ய கீதை சொன்ன
வழி காட்டும் நாயகனைக் காண . . .
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

வேதத்தின் சுவைப்பயனை
விழுமும் வேதவல்லியைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

வேங்கடவனை க்ருஷ்ணனாய்,
ருக்மிணியுடன்,பலராமனுடன் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

அரங்கனை அன்போடு ரசிக்க,
மந்நாதனாய் தரிசிக்க,
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

ஆனையின் துயரம் தீர்த்த
கஜேந்திர வரதனை கண்ணாரக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

ப்ரஹ்லாதனைக் காத்து,
நம்மையும் காக்கும் நரசிம்மனைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

ராமானுஜனைத் தந்த,
ராமானுஜனாய் வந்தவனைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

முதலாழ்வார் மூவரும்,
திருமழிசையாரும் சந்தித்த
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

அன்பைத் தகளியாய் கொண்ட
பேயாழ்வாரின் அவதார ஸ்தலமான
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

ஆயர் குலத்தினனாய்
நம்பெருமாளை மீசையோடு காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

மஹாபாரத யுத்த விழுப்புண்களோடு
வீரமான அன் அப்பனைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

விவேகானந்தனும் தன் கடிதத்தில்
சரணாகதி செய்த ஆதியை அமுதைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

பார்த்தனுக்கும் சாரதியாகி,
நமக்கும் சாரதியான அழகனைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

என் பக்தனுக்காக நான் சங்கம்
முழங்குவேன் என்னும் பார்த்தசாரதியைக் காண
திருவல்லிக்கேணி வாராய் ! ! !

வாராய் . . .
என் அருமைக் குழந்தையே !
வாராய் . . .

உடனே வாராய் . . .
உன்னைத் திருவல்லிக்கேணி
அழைத்துச் செல்வதே என் கடமை !

பார்த்தசாரதி  என்னை அழைத்தான் !
நான் உன்னை அழைத்துச் செல்வேன் !

இது ராமானுஜன் மேல் சத்தியம் . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP