துளசியின் கீழுதித்த தூமணியே !
கோயில் காப்பவரை
நாயகனாய் கண்டாயே !
துளிசியின் கீழுதித்த தூமணியே !
கோயிலை நந்தகோபரின்
மாளிகையாய் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
கொடியையும், தோரணத்தையும்,
வாயிலில் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
வாயில் காப்பவரையும்
உயர்வாய்க் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
மணியால் நிறைந்த
கதவைக் கண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
கதவின் தாள் திறக்க
காப்போரைக் கெஞ்சினாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
ஆயர் சிறுமியாய் உன்னை
மாற்றிக்கொண்டாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
மாயன் மணிவண்ணன்
வாய் நேர்ந்ததை சொன்னாயே !
துளிசியின் கீழுதித்த தூமணியே !
தூயோமாய் வந்தோம்
தூயனைக் காண என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
துயிலெழப் பாடுவோம்
துஞ்சுபவனுக்கே என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
வாயால் மாற்றாதே
அம்மா எனக் கொஞ்சினாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
நேய நிலைக்கதவை
நன்றாய் திற என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
எல்லோரும் தொண்டரே !
அவர் அடி பணி என்றாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
துள்ளும் இளமையை
தூய்மையாய் தரச் சொன்னாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
துப்பில்லாத எம்மை
துளசியாய் மாற்ற வந்தாயே !
துளசியின் கீழுதித்த தூமணியே !
தூயவனின் துளசியாய் நீ !
தூசியாய் உன் திருவடியில் யாம் !
துளசியின் கீழுதித்த தூமணியே !