கருடா...
ஆடி சுவாதியில்
அவதரித்தவனே !
கருடா !
கச்யபரின் தவத்தில்
தோன்றினவனே !
கருடா !
வினதையை விடுவிக்க
வந்தவனே !
கருடா !
அருணனின் தம்பியாய்
பிறந்தவனே !
கருடா !
அன்னைக்காக
அமிர்தத்தை
அபகரித்தவனே !
கருடா !
விஷ்ணுவின்
வரத்தால்
கொடியானவனே !
கருடா !
விஷ்ணுவுக்கும்
வரம் தந்து
வாகனமானவனே !
கருடா !
பகவானை எங்கும்
எப்போதும் சுமந்து
செல்பவனே !
கருடா !
நாராயணனின்
கட்டளைக்காக
சுமுகனை சுமப்பவனே !
கருடா !
கண்ணனின் மீது
வெய்யில் படாமல்
காப்பவனே !
கருடா !
வேதாந்த தேசிகருக்கு
காட்சி தந்து
உபதேசித்தவனே !
கருடா !
சந்த் துகாராமை
வைகுண்டத்திற்கு
அழைத்துச்
சென்றவனே !
கருடா !
என்னையும்
உன்னைப் போல்
பகவானுக்கும்
பக்தருக்கும்
அடிமையாய்
ஆக்கிவிடு !
கருடா !
உடலும் உள்ளமும்,
உயிரும் உணர்வும்,
பக்தியில் திளைத்திருக்க,
எனக்கு அருள் செய் !
நீ தான் விஷ்ணுவுக்கே வரம் தந்தவனாயிற்றே...
என்னையும் சுமுகனைப் போல் சுமந்து உன்னோடு எங்கும் திரியும் ஒரு வரம் தா...
Read more...