ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 நவம்பர், 2010

வாழ்ந்து பார் . . .

ராதேக்ருஷ்ணா...


உனக்கு தோள் கொடுக்க
கண்ணன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது சுமையைத் தாங்க
கோபாலன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு ஆறுதல் சொல்ல
க்ருஷ்ணன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு தைரியம் தர
கோவிந்தன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

 உன் கண்ணீரை துடைக்க
கிரிதாரி இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உன்னை சிரிக்க வைக்க
முரளீதரன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு வாழ்வை சொல்லித்தர
கீதாசார்யன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது கஷ்டங்களை சரி செய்ய
புண்டரீகாக்ஷன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உன்னை எப்போதும் காப்பாற்ற
அச்சுதன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனக்கு வேண்டியதைத் தர
நவநீத சோரன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது பாபங்களை வாங்கிக்கொள்ள
முகுந்தன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது எண்ணங்களை புரிந்துகொள்ள
ஜகந்நாதன் இருக்கிறான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உன்னை புரிந்துகொண்டு
 உலகில் வாழ உனக்கு அருகதை உண்டு . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உலகைப் புரிந்துகொண்டு
உலகோடு ஒத்துவாழ அதிகாரம் உண்டு . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது திறமைகளை உபயோகப்படுத்தி,
எல்லோர் முன்பும் வாழ்ந்து காட்ட
உனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

உனது லக்ஷியங்களை அடைய
கண்ணன் உனக்கு உதவுகின்றான் . . .
அதனால் வாழ்ந்து பார் . . .

கடைசி மூச்சு வரை
சிரத்தையோடு வாழ்ந்து பார் . . .

கடைசி நிமிடம் வரை
முயற்சியோடு வாழ்ந்து பார் . . .

வாழ்ந்து பார் . . .
உன் வாழ்க்கையை பலபேர்
பாடமாகக் கொள்வர் . . .
வாழ்ந்து பார் . . .

Read more...

மனமே . . .ஓ . . .மனமே !

ராதேக்ருஷ்ணா . . . 

மனமே . . .கலங்காதிரு !
நல்லதே நினை . . .

மனமே . . .குழம்பாதிரு !
நல்லதே நடக்கும் . . .

மனமே . . .சோர்ந்துபோகாமலிரு !
நல்லதே நடக்கிறது . . .

மனமே . . .தெளிவாக இரு !
 நல்லதே நடந்தது . . .

மனமே . . . அசராமலிரு !
நன்மை தானாக வரும் . . .

மனமே . . .அழாமலிரு !
க்ருஷ்ணன் பலம் தருகிறான் . . .

மனமே . . . துவண்டு போகாமலிரு !
 சவால்களை சமாளிக்கலாம் . . .

மனமே . . .நம்பிக்கையோடு இரு !
பிரச்சனைகளை தீர்க்கலாம் . . .

மனமே . . .நிம்மதியாக இரு !
தனியாய் நின்று வெல்லலாம் . . .

மனமே . . .புலம்பாமலிரு !
தீர்வுகள் வரிசையில் நிற்கின்றன . . . 
 
மனமே . . .பொறுமையாய் இரு !
எதிர்காலம் உன்னிடம் வருகிறது . . .

மனமே . . .அதைரியப்படாதே !
உலகமே உனக்கு வசப்படும் . . .

மனமே . . .எதிர்பார்க்காதே !
எல்லாம் உன்னிடமே இருக்கிறது . . .

மனமே . . . ஏமாறாதே !
இவ்வளவு தான் உலகம் . . .

மனமே . . .ஓ . . . மனமே !

நீ....உலகை நம்பி இல்லை !

மனமே . . .ஓ . . . மனமே !

நீ....மனிதர்களை நம்பி இல்லை !

மனமே . . . ஓ . . . மனமே !

நீ....செல்வத்தை நம்பி இல்லை !

மனமே . . . ஓ . . . மனமே !

நீ....சொந்தங்களை நம்பி இல்லை !

மனமே . . . ஓ . . . மனமே !
உனக்கு யாரும் சமாதானம் சொல்லவேண்டாம் !
உனக்கு யாரும் தைரியம் தரவேண்டாம் !
உனக்கு யாரும் நம்பிக்கை தரவேண்டாம் !

நீ தான் உலகிற்கே எல்லாம் தரவேண்டும் !

மனமே . . . ஓ . . . மனமே !

என்னிடம் உள்ள ஒரே சொத்து நீயே . . .
என்னை விட்டு நீங்காத பந்தமும் நீயே . . . 

நீ போதும் . . .

நான் வாழ நீ போதும் . . .

 

Read more...

ஞாயிறு, 28 நவம்பர், 2010

செய் . . .

ராதேக்ருஷ்ணா

முயற்சி செய் . . .

முயல்வது சுலபம் . . .

முயல்வது ஆனந்தம் . . .

முயல்வது உன் உரிமை . . .

முயல்வது உன் கடமை . . .

முயற்சி...உன் ஆனந்தம் . . .

முயற்சி...ஆனந்தரஹஸ்யம் . . .

முயற்சி...உன்னை பலப்படுத்தும் . . .

முயற்சி...உன்னை பக்குவப்படுத்தும்  . . .

முயற்சி...உனக்கு தைரியம் தரும் . . .

முயற்சி...உனக்கு நம்பிக்கை தரும் . . .

முயற்சி...உனக்கு மரியாதையைத் தரும் . . .

முயற்சி...வாழ்வை மாற்றும் . . .

முயற்சி...உன்னை மாற்றும் . . .

முயற்சி...புத்தியை மாற்றும் . . .

முயற்சி...உடலை உபயோகப்படுத்தும் . . .

முயற்சி...மனதிற்கு உற்சாகம் தரும் . . .

முயற்சி...சமுதாயத்தை நேராக்கும் . . .

முயற்சி...சிந்தனையைத் தூண்டும் . . .

முயற்சி...பிரச்சனைகளை தீர்க்கும் . . .

முயற்சி...அருள் பெற்றுத் தரும் . . .

முயற்சி...மனதிற்கு சமாதானம் தரும் . . .

முயற்சி...காலத்தை சாதகமாக்கும் . . .

முயற்சி...நல்லனவெல்லாம் செய்யும் . . .

முயற்சி...நல்லவற்றையெல்லாம் தரும் . . .

முயற்சி...தேவைகளை பூர்த்தி செய்யும் . . .

முயற்சி...எல்லைகளை மாற்றும் . . .

முயற்சி...அதிசயங்களை நிகழ்த்தும் . . .

முயற்சி...சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் . . .

முயற்சி...உன்னை சுத்திகரிக்கும் . . .

முயற்சி...உனக்கு உன்னை புரியவைக்கும் . . .

முயற்சி...உலகை வசப்படுத்தும் . . .

முயற்சி...புரட்சியைத் தூண்டும் . . .

முயற்சி...அடிமைத்தளையை உடைத்தெறியும் . . .

முயற்சி...வெற்றியைத் அடிமையாக்கும் . . .

முயற்சி...நஷ்டத்தை லாபமாக்கும் . . .

முயற்சி...இழப்பை ஈடு செய்யும் . . .

முயற்சி...கனவை நினைவாக்கும் . . .

முயற்சி...இயலாமையை மாற்றிக்காட்டும் . . .

முயற்சி...கோபத்தைத் தணிக்கும் . . .

முயற்சி...ஒற்றுமையைத் தரும் . . .

முயற்சி...தெய்வத்தையும் தரும் . . .

முயற்சி உடையார் தோல்வி அடையார் . . .

முயற்சி உடையாரை தெய்வமும் கொண்டாடும் . . .

முயற்சி உடையாருக்கு உலகம் அடிமை . . .

முயற்சி . . .பலம். . .வாழ்க்கை . . .ஆனந்தம் . . .

அதனால் செய் . . .
விடாமுயற்சி செய் . . .
உயிர் போகும்வரை முயற்சி செய் . . .

உயிரே போனாலும் முயற்சி செய்  . . .

செய் . . .

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP