ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 28 செப்டம்பர், 2011

வாழ்க ! வாழ்க ! வாழ்க !

ராதேக்ருஷ்ணா

யாவரும் நலமாயிருக்கட்டும் !

பூமி குளிரட்டும் !

தேவையான மழை பொழியட்டும் !

சுத்தமான ஆகாரம் கிடைக்கட்டும் !

நல்ல தண்ணீர் கிடைக்கட்டும் !

ஒற்றுமை ஓங்கட்டும் !

சமாதானம் பெருகட்டும் !

தீவிரவாதம் அழியட்டும் !

வியாதிகள் இல்லாமல் போகட்டும் !


ஆனந்தம் தாண்டவமாடட்டும் !

பக்தி அதிகமாகட்டும் !

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும் !

ஏழ்மை இல்லாமல் போகட்டும் !

சாதிகள் அழிந்துபோகட்டும் !

பெண்ணடிமை எரிந்து சாம்பலாகட்டும் !

போலிகள் திருந்தட்டும் !

லஞ்சம் ஒழியட்டும் !

அருள் கூடட்டும் !

அன்பு பரவட்டும் !

வாழ்க . . . வாழ்க . . . வாழ்க . . .


Read more...

ஆசிர்வாதங்கள் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 உன் பயம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் குழப்பம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் சந்தேகம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் பிரச்சனைகள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் வியாதிகள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் கவலைகள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் காமம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் முன் கோபம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் அழுகை உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
உன் பலவீனங்கள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .
 
 உன் தோல்விகள் உன்னை
விட்டுப் போகட்டும் . . . 

உன் அவமானங்கள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .

உன் பொறாமை உன்னை
விட்டுப் போகட்டும் . . .

உன் விரோதம் உன்னை
விட்டுப் போகட்டும் . . .

உன் முட்டாள்தனங்கள் உன்னை
விட்டுப் போகட்டும் . . .

உனக்கு தைரியம் வருகிறது . . .

உனக்கு பலம் வருகிறது . . .
 
உனக்கு நம்பிக்கை வருகிறது . . .
உனக்கு வெற்றி வருகிறது . . .

உனக்கு தீர்வு கிடைக்கிறது . . .

உனக்கு அறிவு வளர்கிறது . . .

உனக்கு நிதானம் வருகிறது . . .
 
உனக்கு மனது சமாதானமடைகிறது . . .
 
உனக்கு ஆரோக்கியம் கூடுகிறது . . .
 
உன் குடும்பம் நன்றாயிருக்கும் . . .
உன் வம்சமே க்ருஷ்ணனை அனுபவிக்கும் . . .
 
நீ சந்தோஷமாக இருப்பாய் . . .
நீ பக்தியோடு இருப்பாய் . . .
நீ நிம்மதியாக இருப்பாய் . . .
 
ஆசிர்வாதங்கள் . . .
மனதார ஆசிர்வாதங்கள் . . .
பக்தியோடு ஆசிர்வாதங்கள் . . .
 
எல்லா ஜன்மத்திற்கும் ஆசிர்வாதங்கள் ! ! ! 

Read more...

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

தினமும் கவனி . . .

ராதேக்ருஷ்ணா


வாழ்க்கை தருவதை
எல்லாம் ஏற்றுக்கொள் . . .

வாழ்க்கை உனக்கு
என்னவெல்லாம் தேவையோ
அதை மட்டுமே தருகிறது . . .

வாழ்க்கை தருகிற விஷயங்களில்
நீ உன் வாழ்க்கையை
நடத்த ரஹஸ்யங்கள் ஒளிந்திருக்கிறது . . .

உன் வாழ்க்கை தருகிற பல
அற்புதங்களை அஹம்பாவத்தினால்
நீ உணருவதில்லை . . .

உன் வாழ்க்கை தருகிற பல
பரிசுகளை குழப்பத்தினால்
நீ வாங்கிகொள்வதில்லை . . .

உன் வாழ்க்கை தருகிற பல
நல்ல ஆசீர்வாதங்களை பயத்தினால்
நீ ஏற்றுக்கொள்வதில்லை . . .

உன் வாழ்க்கை தருகிற பல
விசேஷமான வாய்ப்புகளை
நீ கவலையினால் உபயோகப்படுத்துவதில்லை !

உன் வாழ்க்கை எப்படி
உனக்குத் துரோகம் இழைக்கும் ?

உன் வாழ்க்கை எப்படி
உன்னை படாதபாடு படுத்தும் ?

உன் வாழ்க்கை எப்படி
உன்னை அழ வைக்கும் ?

உன் வாழ்க்கை எப்படி
உன்னை அவமானப்படுத்தும் ?

வாழ்வை புரிந்து கொள் !
உன் வாழ்வை புரிந்து கொள் !
சரியாகப் புரிந்து கொள் !

உன் வாழ்க்கை விசேஷமானது !
உன் வாழ்க்கை அற்புதமானது !
உன் வாழ்க்கை அருமையானது !

வாழ்க்கை உன் மீது முழுமையான
நம்பிக்கை வைத்திருக்கிறது . . .

நீ உன் வாழ்க்கையிடம்
பூரணமான நம்பிக்கையை வை . . .

இனியும் உன் வாழ்க்கையைக்
கேவலப்படுத்தாதே . . .

இனி உன் வாழ்க்கையைத்
தொலைக்காதே . . .

இனி உன் வாழ்க்கையை வாழ் . . .

அடுத்தவர் வாழ்க்கை வேறு . . .
உன் வாழ்க்கை வேறு . . .

அடுத்தவர் வாழ்க்கையை
உன்னால் வாழ முடியாது !

அடுத்தவரைப் போல் வாழ
நீ இந்த உலகில் பிறக்கவில்லை !

அடுத்தவரின் வாழ்க்கை
உனக்கு நன்மையைச் செய்யாது !

உன் வாழ்வை கவனி . . .
தினமும் கவனி . . .
இப்பொழுதே கவனி . . .


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP