ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 அக்டோபர், 2013

வந்திருக்கிறேன் அம்மா . . .

ராதேக்ருஷ்ணா


வந்திருக்கிறேன் அம்மா . . .


லலிதா அம்மா . . . 
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


விசாகா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


துங்கவித்யா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


இந்துலேகா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


ரங்கதேவி அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


சுதேவி அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


சித்ரா அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


சம்பகவல்லி அம்மா . . .
அடியாள் கோபாலவல்லி தாசி
உன் வ்ருந்தாவனத்திற்கு
வந்திருக்கிறேன் அம்மா . . .


என்னவென்று சொல்வேன் அஷ்ட மாதாக்களே . . .
அடியாளுக்கு நவ வித பக்தியைத் தாருங்கள் . . .

இந்த தாசிக்கு நீங்கள்
ஆசைப்படும்படி ஒரு பக்தி
வந்தால் போதும் . . .

இந்த ப்ருந்தாவனத்தில் ஏதோ
ஒரு மூளையில் இவளை
பைத்தியமாய் அலையவிடுங்கள் . . .


எனக்கு ஒன்றும் தெரியாது . . .


உங்களின் திருவடிகளில்
சரணாகதி செய்கின்றேன் . . .


இந்த கோபாலவல்லியை
உங்கள் தலைவி ராதிகாராணியிடம்
சேர்ப்பித்துவிடுங்கள் . . .


அவளுக்கு அந்தரங்கம்
கைங்கர்யம் செய்துகொண்டு,
அப்படியே இருந்தால் போதும் . . .


உலகில் ராதிகா மட்டுமே சத்தியம் . . .
ராதா ப்ரேமை மட்டுமே நித்தியம் . . .

ராதிகாவுக்கு கைங்கர்யம் செய்வதே பாக்கியம் . . .

உங்கள் திருநாமங்களை
விடாமல் ஜபிக்கிறேன் . . .

லலிதா, விசாகா, துங்கவித்யா, இந்துலேகா,
ரங்கதேவி, சுதேவி, சித்ரா, சம்பகவல்லி . . .


என்னை ராதிகாவிடம் ஒப்படையுங்கள் . . .

தயவு செய்து என்னை உங்களின்
திருவடி தூளியாய் வைத்துக்கொள்ளுங்கள் . . .



Read more...

சனி, 12 அக்டோபர், 2013

வாராரு . . . வாராரு . . .

ராதேக்ருஷ்ணா



வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
கருடன் மேலே ஜோராய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ரங்கராஜனோடு அமர்க்களமாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஸ்ரீநிவாசனோடு சிங்காரமாய் வாராரு ! ! !
 

வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வரதராஜனோடு வரம் தர வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஜகந்நாதனோடு ஜகத்தை ஆள வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஒய்யாரமாய் இராமானுஜரோடு வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
 உரிமையோடு பக்தர்களோடு வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
புரட்டாசியில் பொக்கிஷமாய் வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
சங்கடங்கள் தீர்க்க சனிக்கிழமை வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
இந்துக்கள் ஜெயிக்க வீரமாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வினையெல்லாம் மாற்றி சரிசெய்ய வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஊரே கொண்டாட ஆசையாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
தெருவெல்லாம் பன்னீரால் நனைய வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
பக்தர்களின் குறையெல்லாம் தீர்க்க வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
ஆண்டாள் மாலையோடு அற்புதமாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
பாவிகளையும் திருத்த பரந்தாமனாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வைகுந்தம் தந்திடவே விரைவாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
இந்துமந்திர நகரம் சிறக்க வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
விண்ணும் மண்ணும் மகிழவே வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வேத மந்திரங்களோடு வேகமாய் வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
திவ்ய ப்ரபந்தத்தோடு சீராக வாராரு ! ! !
 
 
 வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
நாம ஜபத்தோடு நமக்காக வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
தேவரெல்லாம் கைகூப்ப தெருவெல்லாம் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
உன்னையும் என்னையும் காப்பாத்த வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
தூத்துக்குடி பக்திக்குடியாக மாற்றி வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
செண்டை மேளத்தோடு செழிப்பாய் வாராரு ! ! !


வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
நாதஸ்வர மேளத்தோடு நாயகனாய் வாராரு ! ! !
 
 
வாராரு வாராரு வைகுண்டபதி வாராரு !
வாராரு வாராரு வசந்தம் தர வாராரு !
வாராரு வாராரு வாழ்வை மாற்ற வாராரு !
வாராரு வாராரு வெற்றி தர வாராரு !
 
 
சீக்கிரமா வா . . .
எல்லாம் வாங்கிக்க வா . . .
 
 
 

Read more...

வெள்ளி, 11 அக்டோபர், 2013

ஏதேனும் ஆவேனே ! ! !

ராதேக்ருஷ்ணா
 
 



எம்பெருமானார் இராமானுஜரின்
திருவடியில் பாதுகையாய் ஆகமாட்டேனா ! ? !


உடையவர் இராமானுஜரின்
திருக்கைகளில் த்ரிதண்டமாய் ஆகமாட்டேனா ! ? !


திருப்பாவை ஜீயர் இராமானுஜரின்
திருவரையில் காஷாய வஸ்திரமாய் ஆகமாட்டேனா ! ? !


பெரும்புதூர் மாமுனி இராமானுஜரின்
பூக்குடையாய் ஆகமாட்டேனா ! ? !


இளையாழ்வார் இராமானுஜரின்
திருமேனியைத் தீண்டும்
திருமண் கட்டியாய் ஆகமாட்டேனா ! ? !


காரேய் கருணை இராமானுஜர்
உணவருந்தும் ஒரு வாழை இலையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
பவிஷ்யதாசார்யன் இராமானுஜர்
கழுத்தில் ஒரு மாலையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
சங்காழி அளித்த பிரான் இராமானுஜர்
திருமேனியில் பூணூலாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
நம் கோயில் அண்ணன் இராமானுஜர்
அமரும் பீடமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
யதிராஜர் இராமானுஜர் உபயோகிக்கும்
ஒரு பொன் வட்டிலாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
பாஷ்யகாரர் இராமானுஜர் கையில்
ஒரு எழுத்தாணியாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
திருக்குறுங்குடி நம்பிக்கும் உபதேசித்த இராமானுஜரின்
ஜலபாத்திரமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
இளைய பெருமாள் இராமானுஜர்
கைவிரலில் ஒரு மோதிரமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
 ஆதிசேஷ அவதாரமான இராமானுஜரைச்
சுமக்கும் படுக்கையாய் ஆகமாட்டேனா ! ? !


லக்ஷ்மண முனி இராமானுஜரின் காதுகளில்
ஒரு குண்டலமாய் ஆகமாட்டேனா ! ? !


எங்கள் கதியான இராமானுஜ முனியின்
தலையில் ஒரு க்ரீடமாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
சம்பத்குமாரனின் தகப்பனார் இராமானுஜரின்
திருக்கைகளில் அக்ஷதையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
தமர் உகந்த திருமேனி இராமானுஜரின்
பாதத்தில் தூசியாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
தாம் உகந்த திருமேனி இராமானுஜரின்
திருமேனியில் ஒரு போர்வையாய் ஆகமாட்டேனா ! ? !
 
 
தானான திருமேனி இராமானுஜரின்
அருகில் ஒரு விளக்காய் இருக்கமாட்டேனா ! ? !
 
 
 பஞ்ச ஆயுதங்களின் அவதாரமான,
நம் இராமானுஜரோடு ஏதேனும் ஆவேனே ! ! !


ஏதேனும் ஆவேனே . . .
ஏதேனும் ஆவேனே . . .
ஏதேனும் ஆவேனே . . .
 
 
அடியேன் இவற்றில் ஏதேனும் ஆக 
இராமானுஜரின் திருநாமங்களை
ஜபிக்கும் பாகவதர்கள் அடியேனை ஆசிர்வதியுங்கள் ! ! !


அடியேன் இவற்றில் ஒன்றேனும் ஆக
108 திவ்ய தேச எம்பெருமான்கள்
தயை கூர்ந்து அனுக்ரஹியுங்கள் ! ! !


அடியேன் இந்தப் பாக்கியத்தை அடைய
ஸ்வாமி இராமானுஜரின் ஆசார்யர்கள்
வெறிதே க்ருபை செய்யுங்கள் ! ! !


அடியேன் இந்த நிலையை அடைய
ஸ்வாமி இராமானுஜரின் சிஷ்யர்கள்
வேகமாய் எனக்கு பக்குவம் தாருங்கள் ! ! !


இராமானுஜா . . . இராமானுஜா . . . இராமானுஜா....
\இந்த ஜந்துவையும் உங்களின்
சொத்தாய் வைத்துக்கொள்ளுங்கள் ! ! !


இந்த 500வது ஆனந்தவேதம் உமக்கே சமர்ப்பணம் ! ! !
இதுவரை எழுதியதும் உமக்கே சமர்ப்பணம் ! ! !
இனி எழுதுவதெல்லாம் உம் ஒருவருக்கே சமர்ப்பணம் ! ! !


அடியேன் இராமானுஜ தாசன் . . .


Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP