ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 7 செப்டம்பர், 2017

வரும்...போகும்...

காரணம் எதுவாயினும்
தற்கொலை தவறே !

தற்கொலை
தியாகமல்ல !

தற்கொலை
தீர்வல்ல !

தற்கொலை
அறிவு சார்ந்ததல்ல !

தற்கொலை
நியாயமல்ல !

யார் செய்தாலும்,
தற்கொலை ஒரு
முட்டாள்தனமே !

எதற்காக தற்கொலை
செய்துகொண்டாலும்,
அது பைத்தியக்காரத்தனமே !

படிக்காதவர் செய்தாலும்,
படித்தவர் செய்தாலும்,
தற்கொலை அசிங்கமே !

படிப்பிற்காகத் தூக்கிட்டு உயிரை விட்டாலும்...
இனத்திற்காக தீக்குளித்து உயிரை விட்டாலும்...
மொழிக்காக
விஷமறிந்து உயிரை விட்டாலும்,
அவமானத்திற்காக கீழே குதித்து உயிரை விட்டாலும்,
காதலுக்காக ஜோடியாய் கடலில் வீழ்ந்தாலும்,
பரீட்சையில் தோல்விக்காக கழுத்தில் சுருக்கிட்டுக் கொண்டாலும்...
தற்கொலை மிகக்கேவலமான செயலே...
கொடுமையான மனோவியாதியே !

இதைவிடக் கொடுமை...

தற்கொலை செய்து கொண்டவரை தியாகியாய் பேசுவதே !
அவர்களை எதிர்கால
சந்ததிக்கான விதையாய் கொண்டாடுவதே !

இங்கே தற்கொலைகள் செய்துகொள்பவர்களை கொண்டாடுவதே பிழைப்பாயிற்றே !!!
என்ன பயங்கரம் இது !!!

நல்லவேளை இன்னும்
இணைய விளையாட்டில் தற்கொலை செய்பவரை வீரராய்
கொண்டாடாதவரை நாம் பாக்கியம் செய்தோம் !!!

அழகான வாழ்க்கைக்கு ஆயிரம் அர்த்தங்கள் !
அந்த வாழ்க்கையில் வாழ
கோடி விஷயங்கள் உண்டு !

ஒரு சில தோல்விகள்...
ஒரு சில ஏமாற்றங்கள்...
ஒரு சில நஷ்டங்கள்...
ஒரு சில அவமானங்கள்...
இவையெல்லாம் வாழ்வில் வரும்...போகும்...

உயிரைவிட உலகில் இவை பெரியதோ ?!?

மெத்தப் படித்த சமுதாயம் என்று
நினைப்பவரெல்லாம்,
தற்கொலையை நியாயப்படுத்துவதே
அபத்தம்...விபரீதம்...

கல்லால் அடித்து விரட்டப்பட்ட நிலையிலும்,
சொறி பிடித்த தெரு நாய்
தற்கொலைக்கு முயலவில்லை !!!

மரங்களை எல்லாம் வெட்டி காட்டை பலைவனமாய் மாற்றிய பின்னும், பறவைகள் தற்கொலையை நினைக்கவில்லை !!!

காட்டிலிருந்து தன் இனத்திடமிருந்து பிரித்து கூண்டில் அடைத்தபோதும், மிருகங்கள் தற்கொலைக்கு யோசிக்கவில்லை !!!

தன்னை அழிக்க உலகமே ஓயாமல் முயற்சி செய்துகொண்டிருந்தாலும், கொசுக்கள் கூட தற்கொலைக்கு ஆசைப்படவில்லை !!!

பெற்ற பிள்ளைகளே முதியோர் இல்லத்தில் வீசிவிட்ட பிறகும், வயதானவர்கள் தற்கொலைக்கு சிந்திக்கவில்லை !

கைகால் இல்லாதவர்,
கண்ணில்லாதவர்,
விபத்தில் கழுத்திற்கு கீழே உணர்ச்சி இழந்தோர்...
இப்படிப் பலரும் ஏதோ ஒரு நற்செயலை செய்து இங்கே மற்றவருக்காய் வாழ்கின்றனர்...

ஆனால் படித்த முட்டாள்கள் சிலரே தற்கொலை செய்து கொண்டு, வாழ்வை அபத்தமாக்குகின்றனர்...

தற்கொலை செய்துகொள்பவர், தீவிரவாதியை விட பயங்கரமானவர்கள்...

ஹே மானிடா !
தற்கொலை செய்பவரின் முகத்தில் காரி உமிழக் கற்றுக்கொள் !!!
தற்கொலை செய்தவரை அருவருப்பாய் பார்க்க பழகிக்கொள் !!!

அப்போதுதான் நாளைய சமுதாயம் உருப்படும் !!!

Read more...

திங்கள், 21 ஆகஸ்ட், 2017

கண்ணா ! தூது செல் !

ராதே...
வருவாயா...
உன் தாசி
கெஞ்சுகிறேன் !

ராதே...
தருவாயா...
உன் தாசி
காத்திருக்கிறேன் !

ராதே...
அருள்வாயா...
உன் தாசி
யாசிக்கிறேன் !

ராதே...
உன் தாசியின்
இதயத்தை
உனக்குப் பிடித்த
நிதிவனமாய்
மாற்றிவிடு !

ராதே...
உன் தாசியின்
மனதை
நீயும் கண்ணனும்
விளையாடும்
மெத்தையாய்
மாற்றிவிடு !

ராதே...
உனக்கும்,
உன் கண்ணனுக்கும்,
அந்தரங்க
கைங்கரியம்
செய்ய உன் தாசிக்கு
வாய்ப்பு கொடு !

ராதே...
தகுதியில்லாத
உன் தாசியை
உன் திருவடியில்
என்றுமே
வைத்துக்கொள் !

க்ருஷ்ணா !
உன்னிடம்
கெஞ்சுகிறேன் !
எனக்காக
ராதிகாவிடம்
தூது செல் !

என் மனதை
உன் ராணியிடம்
சொல் !

என் தேவையை
உன் அழகியிடம்
சொல் !

என் தாபத்தை
உன் செல்லத்திடம்
சொல் !

என் அவசரத்தை
உன் தேவதையிடம்
சொல் !

காத்திருக்கிறேன்
கண்ணா !
உன் காதலியின்
ஒரு வார்த்தைக்காய் !

Read more...

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

யாரோ...இந்த பிள்ளை...

முச்சந்தி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

அரச மரம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

ஆத்தங்கரை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

குளத்தங்கரை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

மஞ்சள் பொடி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

களிமண் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கண் திருஷ்டி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கருப்பு எரும்பு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

கன்னி மூலை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

அருகம்புல் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

எருக்கம்பூ என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

தேங்காய் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மாம்பழம் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

கொழுக்கட்டை என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

சுண்டல் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

அப்பம் என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

கரும்பு என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மஹாபாரதம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

யானை என்றால்
இந்த பிள்ளையுண்டு !

சதுர்த்தி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

குடை என்றால்
இந்த பிள்ளைக்குண்டு !

மூஞ்சூறு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

பசுஞ்சாணம் என்றால்
இந்த பிள்ளையுண்டு !

வெள்ளெருக்கு என்றால்
இந்த பிள்ளையுண்டு !

சுழி என்றால்
இந்த பிள்ளையுண்டு !

யாரோ !?!
இந்த பிள்ளை
யாரோ !?!

இவரே பிள்ளையாரோ !!!

சங்கடங்கள் நீக்க
சதுர்த்தியில்
வந்த பிள்ளையே !!!

சிவனையும் எதிர்த்து,
தாய் சொல்லைக் காக்க
வந்த பிள்ளையே !!!

அம்மையப்பனே உலகம்
என எல்லோருக்கும் சொல்ல
வந்த பிள்ளையே !

எல்லோருக்கும் பிள்ளையே !!!
சமத்துப்பிள்ளையே !!!
கொழுக்கு மொழுக்கு பிள்ளையே !!!
கொழுக்கட்டை பிள்ளையே !!!

ஊரும் உலகமும்
கொண்டாடும் பிள்ளையே !!!

தொந்திப்பிள்ளையே !!!
தந்தப்பிள்ளையே !
பிள்ளைகள் கொண்டாடும்
பிள்ளையே !!!

வா !
வா !
உனக்காகவே
நாங்கள்
ஆசை ஆசையாய்
காத்திருக்கிறோம் !

அப்பம், பழம், கரும்பு...
கூடவே எங்கள் அன்பும்...
உனக்காகவே....

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP