ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 5 ஏப்ரல், 2012

வேட்டைக்காரன் . . .

ராதேக்ருஷ்ணா

வேட்டை . . .
வேட்டைக்காரன் . . .
காடு . . .

ஒரு கையில் வில்லோடு,
செம்பவள வாயில் புன்னகையோடு
ஒரு வேட்டைக்காரன் . . .

ஒரு கையில் அம்போடு,
உள்ளத்தில் கருணையோடு
ஒரு வேட்டைக்காரன் . . .

ஒரு பக்கம் நரசிம்ம மந்திரியோடு,
கண்களில் காதலோடு
ஒரு வேட்டைக்காரன் . . .

ஒரு பக்கம் யுவராஜ க்ருஷ்ணனோடு,
சாந்தமான திருமுகத்தோடு
ஒரு வேட்டைக்காரன் . . .

முன்னே ப்ரியதர்சினி கஜராணியோடு,
பின்னே சங்கீதக் கச்சேரியோடு
ஒரு வேட்டைக்காரன் . . .

சர்வாபரண பூஷிதனாக,சர்வ அலங்கார
சாக்ஷாத் மன்மத மன்மதனாக
ஒரு வேட்டைக்காரன் . . .

முப்பதுமுக்கோடி தேவர்களும்,
பக்த ஜனங்களும் திருவடி தொழும்
ஒரு வேட்டைக்காரன் . . .

இல்லாதவரும்,இருக்கின்றவரும்,
பொல்லாதவரும்,நல்லவரும் விரும்பும்
ஒரு வேட்டைக்காரன் . . .

நாத்திகனும்,ஆத்திகனும்,
ஊரும்,உலகமும்,நாடும்,நகரமும் பேசும்
ஒரு வேட்டைக்காரன் . . .

வேட்டைக்காரன்
என் அந்தப்புர நாயகன்
அனந்தபத்மநாபன் . . .

வேட்டை
துஷ்ட நிக்ரஹம்
சிஷ்ட பரிபாலனம் . . .

வேட்டையாடும் காடு
அனந்தனும் அந்தமில்லாதவனும்
உறையும் திருவனந்தபுரம் . . .

வேட்டை நாள் . . .
உத்தமமான பங்குனி உத்திரமான
சுபயோக சுபதினமான இன்று . . .

நீ செய்யவேண்டியது . . .
மானசீகமாய், வேகமாய்
திருவனந்தபுரத்திற்கு
வரவேண்டியது . . .

புறப்படு . . .வந்துவிடு . . . கொண்டாடு




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP