ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 நவம்பர், 2016

புதிய விடியல்

புதிய விடியல்...
புத்தம் புதியதாய் ஒரு விடியல்...

நம்பிக்கை விடியல்...
நல்லதோர் விடியல்...

சுத்தமான விடியல்...
சுத்தப்படுத்தும் விடியல்...

சாமானியனுக்கான விடியல்...
சாந்தி தரும் விடியல்...

உற்சாகமான விடியல்...
உள்ளம் சிலிர்க்கும் விடியல்...

உழைப்பிற்கான விடியல்...
உண்மையான விடியல்...

நேர்மைக்கான விடியல்...
நெடுநாளாய் ஏங்கின விடியல்...

பதுக்கியவரை பரிகசிக்கும் விடியல்...
பதுக்காதவர் புன்னகைக்கும் விடியல்...

நெஞ்சம் நிறைந்த விடியல்...
நெக்குருக நன்றி சொல்லும் விடியல்...

நல்லவருக்கான விடியல்...
நன்மை தரும் விடியல்...

புதிய விடியல்...
புதிய பாரதத்தின் விடியல்...
புத்தம் புதிய பாரதத்திற்கான விடியல்...

உறுதியான விடியல்...
உலகையே உசுப்பேத்தும் விடியல்...

பிரமாதமான விடியல்...
பிரதமரால் வந்த விடியல்...

தீவீரவாதம் அழும் விடியல்...
தெய்வம் தந்த விடியல்...

வாழிய...வாழிய...வாழியவே....

Read more...

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

ஆரோக்கியம் !

ஆரோக்கியம் !

உலகில் நீ எதை இழந்தாலும்,
ஆரோக்கியத்தை மட்டும் இழந்துவிடாதே !

உலகில் நீ யாரை
மதிக்காவிட்டாலும்
ஆரோக்கியத்திற்கு
மரியாதை கொடு !

உன்னோடு கடைசி
வரை யாரும்
இருக்கப்போவதில்லை,
உன் உடலைத் தவிர !

யாரை நீ வெறுத்தாலும்,
உடல் ஆரோக்கியத்தை
மட்டும் வெறுக்காதே !

ஆரோக்கியம் இருந்தால்,
இங்கே பிச்சை எடுத்தாவது
வாழ்ந்துவிடலாம் !

ஆரோக்கியத்தை இழந்தால்
பணமும், பதவியும், குடும்பமும்,
தொழிலும், எதுவும் பலனில்லை !

உலகமே உன்னை ஒதுக்கினாலும்,
ஆரோக்கியமாய் உள்ள வரை
நீ நிம்மதியாய் வாழலாம் !

ஆரோக்கியத்தை இழந்தால்
நீ இங்கே செல்லா காசு !
நீ எல்லோருக்கும் பாரம் !

ஆரோக்கியம் இல்லை என்றால்
கணவனும் விரோதியே !
மனைவியும் பாரமே !
பிள்ளைகளும் வழிப்போக்கரே !
உற்றாரும் வசைபாடிகளே !

உன் படிப்பை விட,
உன் பதவியை விட,
உன் பணத்தை விட,
உன் குடும்பத்தை விட,
உன் ஆசையை விட,
உன் லக்ஷியத்தை விட,
உன் ஜாதியை விட,
உன் குலத்தை விட,
உன் ஆரோக்கியம் உயர்ந்ததே !!!

எவ்வளவு நெருங்கின உறவானாலும்,
யாருக்காகவும், எதற்காகவும்
ஆரோக்கியத்தை விட்டுக்கொடுக்காதே !

உடல்...
உன் க்ருஷ்ணன் உனக்கென
விசேஷமாய் தந்தது !
அதுவே அவனை அடைய
ஒரே உயர்ந்த வழி !

உன் மூச்சுக்காற்று
உள்ளவரை உன் உடலை
ஜாக்கிரயையாய்
பார்த்துக்கொள் !

உடலை அபிமானிக்காதே
என்று தான் சொன்னார்களே
ஒழிய, ஆரோக்கியத்தை
கவனிக்காதே என்று சொல்லவில்லை !

நீ ஆரோக்கியமாய்
இருந்தால் தானே
திவ்யதேச யாத்திரை போகலாம் !
மஹாத்மாக்களை சேவிக்கலாம் !
சத்சங்கம் கேட்கலாம் !
பஜனை பாடலாம் !
நர்த்தனம் ஆடலாம் !
கண்ணனைப் பார்க்கலாம் !
கைகளால் கண்ணனைத் தொடலாம் !
வாயால் கண்ணனை முத்தமிடலாம் !
குருவிற்கு கைங்கரியம் பண்ணலாம் !
இன்னும் நிறைய செய்யலாம்...

உன்னிடம் எனக்கு
இது ஒன்று தான் பிரார்த்தனை !

தயவு செய்து உன்
ஆரோக்கியத்தில் கவனம் வை !

கண்ணனுக்காக ...

உன்னுள் உறையும் கண்ணன்,
நீ ஆரோக்கியமாய் இருந்தால் தானே
சந்தோஷமாய் இருப்பான் ...

உன் உடல் கண்ணன் உறையும் கோயில் !!!

கோயிலை நன்றாய் வைப்பாயா !?!

Read more...

செவ்வாய், 10 மே, 2016

ராமானுஜா !!!

ராமானுஜா...

சித்திரைக்கும் சீர்மை கொடுத்த
ராமானுஜா !!!

திருவாதிரைக்கும் திருவான
ராமானுஜா !!!

ஸ்ரீபெரும்புதூருக்கு ஸ்ரீயைத் தந்த
ராமானுஜா !!!

காந்திமதியின் கருவறையில் வந்துதித்த
ராமானுஜா !!!

கேசவ சோமயாஜியின் தவப்பயனே
ராமானுஜா !!!

பெருந்தேவியின் தாகத்தையும் தீர்த்த
ராமானுஜா !!!

வரதனையும் வழித்துணையாக்கிய
ராமானுஜா !!!

திருக்கச்சி நம்பியைப் பெருமைபடுத்திய
ராமானுஜா !!!

ஆளவந்தாரின் 3 விரல்களையும் நிமிர்த்தின
ராமானுஜா !!!

பெரிய நம்பிகளின் திருவடி
நிழலில் ஒதுங்கின ராமானுஜா !!!

திருக்கோஷ்டியூர் நம்பியின் சோதனையில் ஜெயித்த
ராமானுஜா !!!

திருமாலையாண்டானுக்கும் திருவாய்மொழியின் ரகசியத்தை சொன்ன
ராமானுஜா !!!

திருவரங்க பெருமாள் அரையருக்கு
மஞ்சள் காப்பிட்ட ராமானுஜா !!!

பெரிய திருமலை நம்பிகளிடம் ராமாயணம் கேட்ட
ராமானுஜா !!!

திருமலையானுக்கும் திருத்தமாய்
மாலை தர அனந்தாழ்வானைத் தந்த
ராமானுஜா !!!

ரங்கனும் " பரமபதத்துக்கும், பூலோகத்துக்கும் உடையவன்(ர்) நீ " என்ற
ராமானுஜா !!!

அடியோங்களையும் ஆட்கொள்ள வந்த காரேய் கருணை ராமானுஜா !!!

நீர் எமக்கு முன் பிறந்ததால்
நாங்களும் உய்தோம் !!!

உய்ய ஒரே வழி
என்றும் உடையவர் திருவடி !!!

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP