ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 ஆகஸ்ட், 2010

புன்னகை அழகன் !

ராதேக்ருஷ்ணா



புன்னகை !

பார்த்தவுடன் சந்தோஷம் தருவது !

எல்லோரும் ஆசைப்படுவது !

எல்லோரும் செய்யவேண்டியது !

சிலரைப் பார்த்தால்
தானாக சந்தோஷம் தரும் . . .

சிலரை நினைத்தால்
அளவில்லாத ஆனந்தம் வரும் . . .

சிலரைப் பற்றி பேசினால்
நிச்சயம் குதூகலம் வரும் . . .

சிலரைப் பற்றி கேட்டால்
கண்டிப்பாக புன்னகை வரும் . . .

இவை அனைத்தும்
சேர்ந்த ஒருவர் இருந்தால் . .? !
அவரைப் பார்த்தால் . . ? !

எப்படி இருக்கும் . . .!

சொல்ல முடியாது . . .
வர்ணிக்க முடியாது . . .

ஆனாலும் அனுபவிக்க முடியும் . . .
அனுபவித்தால் ! ! !

அனுபவித்தேன் . . .

பார்த்தேன் . . .ரசித்தேன். . .அனுபவித்தேன்

உனக்கும் சொல்கிறேன் . . .

என்ன பார்த்தேன் ?
எங்கே பார்த்தேன் ?
எப்படி பார்த்தேன் ?

நிச்சயம் சொல்கிறேன் . . .
ப்ரார்த்தனை செய்து கொண்டிரு . . .


ப்ரார்த்தனை செய்துகொண்டு
காத்திருந்தாயா ?


காத்திருத்தல் ஒரு சுகம் . . .


அதிலும் மிக உயர்ந்த ஒரு
பொருளுக்காகவோ,
மிக மிக உயர்ந்த ஒருவருக்காகவோ
காத்திருத்தல் ஒரு பரமானந்தம் !


நானும் காத்திருந்தேன் !


பல வருடங்களாகக் காத்திருந்தேன் !


ஆசை ஆசையாய் காத்திருந்தேன் !


அழுகையோடு காத்திருந்தேன் !


ஆவலோடு காத்திருந்தேன் !


திடீரென்று என்னை
வரவழைத்துவிட்டான் . . .


புன்னகை அழகன் . . .
புன்னகை மன்னன் . . .
புன்னகை நாயகன் . . .
புன்னகை பகவான் . . .
புன்னகையின் அர்த்தம் . . .


வரம் தரும் ராஜன் . . .
அருளாளப் பெருமாள் . . .
தேவராஜன் . . .
துயரறு சுடரடி ஸ்வாமி . . .


என் வரதராஜன் என்னை அழைத்தான் . . .


Lord Sri Varadharajan, Kanchipuram



அடியேனை அழைத்தான் . . .
அத்திகிரி நாதன் அழைத்தான் . . .
பெருந்தேவி மணாளன் அழைத்தான் . . .

பெருமாள் கோயில் என்றாலே,
அது காஞ்சி வரதராஜன் கோயில்தான்
என்று ஸ்ரீ வைஷ்ணவம் சொல்லும் !
அந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றேன் !

எதிர்பார்க்காத ஒரு தரிசனம் . . .

சரியாக அன்று ஆவணி மாதப் பிறப்பு !
(17 ஆகஸ்ட் 2010
உனக்குப் புரியவே இந்த தேதியைக்
குறிப்பிட்டேன்)

கோயிலின் வாசலில் நிற்கும்போதே
மேனி சிலிர்க்க, ஒரு சுகானுபவம் !

பெரிய துளசி மாலையை
தனக்காக வாங்க எனக்கு
ஆணையிட்டான் !

உள்ளே நுழைந்ததும்
சிலு சிலுவென சுகமான
தென்றலாய் என் வரதன்
என்னை{எங்களை}த் தீண்டினான் . . .

உள்ளும் புறமும் சிலிர்க்க,
திருக்கச்சி நம்பிகளின்
ஆலவட்ட கைங்கர்யத்தில்
திளைத்த ராஜனின் அரண்மனையில்
ஆனந்தமாய் நுழைந்தேன்{நுழைந்தோம்} . . .

உள்ளே அழகாகத் திருடன்,
வெட்கமில்லாமல் மண்டபத்தில்
அனைவரும் தன்னை மறந்து
வேடிக்கைப் பார்க்கச் சுகமாக,
மஞ்சனமாடிக் கொண்டிருந்தான் . . .




நாங்களும் எங்களை மறந்தோம் . . .


ப்ரபுவின் திருமுக மண்டலமும்,
தாயாரின் அதிசுந்தர வதனமும்,
பூதேவியின் பூத்த திருமுகமும்,
என்னை {எங்களை} வா வா
என்று அழைக்க ஆனந்தத்தில்
திக்குமுக்காடிப்போனேன்{போனோம்}


பக்தியுடையோருக்கு எளியனான
வரதராஜன் ஆசையோடு பெண்கள்
தொடுத்த ஜாதி மல்லியை வாங்கிச்
சாற்றிக்கொண்டு, எனக்கு {எங்களுக்கு}
ஆசிர்வாதம் செய்தான் . . .


ஆனந்தமாய் தீர்த்தம் தந்து,
தன் திருவடிகளை (சடாரியை)
எங்கள் முடிகளில் வைத்து,
தன் கருணையை என் {எங்கள்}
மேல் பொழிந்தான் . . .


திருக்கச்சி நம்பிகள்,
ஸ்வாமி ஆளவந்தார்,
ஸ்ரீ பெரிய நம்பிகள்,
யதிராஜன் ஸ்வாமி இராமானுஜர்,
ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகர்,
ஸ்ரீ மணவாள மாமுனிகள்,
போன்ற மஹாத்மாக்கள்
திருவடி பதித்து நடந்த,
அத்திகிரி நாதனின் கோயிலில்
நானும்{நாங்களும்} நடந்தேன்{நடந்தோம்} !


வரதராஜனின் திருமஞ்சனத்தை
ரசித்துவிட்டு,ஸ்வாமி இராமானுஜரைத்
தன் பிள்ளையெனக் கொண்டாடி,
அவரிடத்தில் தீர்த்தம் வாங்கிக்குடித்த,
வேடுவச்சியாக வந்த,
பெருந்தேவித் தாயாரைச்
சேவித்தேன் {சேவித்தோம்} . . .


என்னவென்று சொல்வது . . .
பெருந்தேவித் தாயாரின் அழகை . . .
அவளின் திவ்ய கருணையை . . .
மனதிலே ஒரு சாந்தி வந்தது. . .
மனது பாரத்தைவிட்டு லேசானது . . .



பெருந்தேவித்தாயாரின் உத்தரவோடு,
யக்ஞக் குழந்தையான,
அவளின் பர்த்தாவைக் காண,
குழந்தை போல்
ஓடினேன் {ஓடினோம்}

இரு இன்னும் முடியவில்லை . . .
ஒரு நாளில் சொல்ல
ஆதிசேஷனாலேயே முடியாது . . .
நான் எம்மாத்திரம்...
மீண்டும் நாளை தொடருவேன் . . .
அதுவரை இதையே
திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிரு . . .

படித்துப் பார்த்தாயா ? ! ?

சரி நான் தொடருகின்றேன் . . .

"நான் ஒன்றும் தனம் சேர்க்கவில்லை !
என் தகப்பனாரும் சேமித்துவைக்கவில்லை !
என் முப்பாட்டனார் ப்ரம்மதேவன்
ஹஸ்திகிரியின் மேல் சேமித்த தனமான
அத்திகிரி அருளாளன் வரதராஜன்
இருக்கின்றான்" . . .என்று
நிகமாந்த தேசிகர் சொன்ன
காஞ்சி நாயகனைக் காண படிகளில்
துள்ளி ஏறினேன் {ஏறினோம்} . . .

எந்தப் படிகட்டுகளில்
யாதவப்ரகாசரின் தாயாருக்கு,
அவளுடைய கேள்விக்கு,
பதில் கிடைத்ததோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .

எந்தப் படிகட்டுகளில்,
திருக்கச்சி நம்பிகள் தினமும்
பலமுறை ஏறி இறங்கினாரோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .

எந்தப் படிக்கட்டுகளில்,
காரேய் கருணை இராமானுஜர்,
துள்ளிக்குதித்து ஏறினாரோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .

எந்தப் படிக்கட்டுகளில் ஏறினால்,
கோடி ஜன்மாவின் பாபங்கள்
சத்தியமாக நாசமாகுமோ,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .

படி ஏறக் கால்களையும் கொடுத்து,
தன்னைப் பார்க்க ஆசையும் கொடுத்து,
தரிசிக்க நேரத்தையும் தந்த,
வரம் தரும் ராஜனைக் காண,
தேசிகரும் மேனி சிலிர்க்க ஏறின,
அந்தப் படிக்கட்டுகளில்
ஆனந்தமாக ஏறினேன் {ஏறினோம்} . . .

ஏறி உள்ளே சென்றால்,
அங்கும் சில படிக்கட்டுகள் . . .
அதில் ஏற ஆரம்பித்தவுடன்,
அசந்துபோனேன் {அசந்துபோனோம்} !
அந்தப் புன்முறுவல் பூத்தத்
திருமுக மண்டலத்தைப் பார்த்து,
வாய் விட்டு,இதயம் ஆனந்தத்தில்
திளைக்க,ஆத்மா ப்ரசன்னமாக,
ஹா ஹா என்று சத்தமாக,
சிரித்தேன் . . .{சிரித்தோம்} !

ஓ ! என்ன சிரிப்பு !
எத்தனை அழகான சிரிப்பு !
என்ன அற்புதமான புன்னகை !
அந்தப் புன்னகையில்தான்,
எவ்வளவு உரிமை. . .
புன்னகை மன்னன் இவன் !
புன்னகை அழகன் இவன் !
புன்னகை ஜோதி இவன் !

போதும் . . .போதும் . . . போதும் . . .

எல்லா துன்பங்களும்,
அழிந்து போகும் இடத்தைக்,
கண்டுபிடித்துவிட்டேன் . . .
வரதராஜனைப் பார்த்தவுடன்,
அந்தப் புன்னகையைப் பார்த்தவுடன்,
மனதில் சஞ்சலங்கள் ஓடிவிட்டன . . .

நிச்சயம் முதலில் பகவானின்
திருவடியைத் தான் பார்க்கவேண்டும்
என்பது தெரிந்தும்,
முதலில் வரதராஜனின் திருமுகமே,
என்னை வசீகரித்தன . . .
அதுவும் அந்தப் புன்னகை . . .
ஐயோ ! இதுவரை எங்கும் காணாதது !
யாரிடமும் இல்லாதது !
என் மனதின் சந்தோஷம் 
உனக்குப் புரிகிறதா . . ?
தயவு செய்து புரிந்துகொள்ளேன் . . .

நான் சொல்வதில் சந்தேகம்
இருந்தால் நீயே போய்ப் பார் . . .
பார்த்தால் நீ ஒரு ஆனந்தவேதம்
எழுதுவாய் . . .
இதை விட அழகாக எழுதுவாய் . . .

வரதராஜா ! உன் புன்னகைக்கு 
நான் அடிமை . . .
வரதராஜா ! உன் புன்னகைக்கு
என் வம்சமே அடிமை . . .

வரதராஜா ! உன் புன்னகைக்கு
அடியேன் ஒரு சன்மானம்
தரவேண்டுமே . . ?
என்ன சன்மானம் தருவது ?
எனக்குப் பிடித்ததைத் தானே
தரவேண்டும் . . .
எனக்கு ரொம்பப் பிடித்தது
என் சிஷ்யர்களே . . .
ஆம். . . உன் புன்னகைக்கு
என் சிஷ்யர்களைத் தந்தேன் . . .

இனி என் சிஷ்யர்கள் உன் சொத்து . . .
அவர்களின் வாழ்க்கை உன் பொறுப்பு . . .
அவரின் ஆனந்தம் உன் புன்னகை . . .

இன்னும் கூட நிறையச் சொல்ல
ஆசை அலைமோதுகிறது . . .
இனி நீ வரதராஜனின் சொத்து . . .

இதற்கு மேல் நான் உனக்கு
என்ன சொல்லவேண்டும் . . .

வரதனின் கையை உற்றுப்பார் ...
"மா சுச:" என்று எழுதி வைத்திருக்கிறார் !

அதாவது "வருந்தாதே" என்று அர்த்தம் . . .

இனி வருந்தாதே . . .
வருத்தம் வந்தால் வரதனின்
திருக்கையை நினைத்துக்கொள் . . .

வா . . . ஒரு நாள்
நாம் எல்லோரும் சேர்ந்து
வரதனைக் காணப் போகலாம் . . .

சீக்கிரம் வந்துவிடு . . .
உன் எஜமானனைக் காண. . .
Lord Varadharaja Temple, Kanchipuram


உனக்காக ஒரு
புன்னகை காத்திருக்கிறது . . .

உன்னைக் காண ஒரு
புன்னகை மன்னன்

காத்திருக்கிறான் . . .

உன்னை வசீகரிக்க

ஒரு
புன்னகை அழகன்

தயாராக நிற்கிறான் . . .

வா . . .

என் சமத்துக்குழந்தையே . . .
வா . . .

வரதனைக் காண வா . . .
புன்னகை அழகனைக்

காண வா . . .




Read more...

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

காதலி . . .

ராதேக்ருஷ்ணா

Lord Sri Parthasarathy, Triplicane

 கண்கள் பலவிஷயங்களை
காண்கிறது . . .

ஆனால் எல்லா விஷயங்களும்
சுகமானவையா என்றால்
இல்லை என்பதே பதில் . . .

பார்க்கின்ற எல்லாமுமே
வாழ்க்கைக்கு
பிரயோஜனமானதா என்பதும்
நிச்சயமில்லை . . .

பார்ப்பதால் நன்மை அடைந்தோமா
என்பதும் சரியாகத் தெரியவில்லை . . .

ஆனாலும் எல்லாவற்றையும்
பார்த்துக்கொண்டேயிருக்கின்றோம் . . .

நாம் பார்க்கின்ற பல விஷயங்களில்
கண்கள் சந்தோஷத்தை
அனுபவிக்கின்றதா என்பதை
நாம் அறிவதேயில்லை . . .

சில விஷயங்களில்
சத்தியமாக
கண்கள் அகண்டு விரிந்து
மலர்கின்றன . . .

நேற்று என் கண்கள்
மலர விரிந்தன . . .

நேற்று என் கண்கள்
அதிசயத்தில் மூழ்கின . . .

நேற்று என் கண்கள்
ஆனந்தத்தில் திளைத்தன . . .

நேற்று என் கண்கள்
கண்ணீரில் மூழ்கின . . .

நேற்று என் கண்கள்
இமைக்க மறந்தன . . .

நேற்று என் கண்கள்
காட்சியை மாற்ற யோசித்தன . . .

ஏன் ?
நேற்று எதைக் கண்டன என் கண்கள் ?
எதனால் இப்படி நடந்தது ?

நேற்று அடியேன்
திருவல்லிக்கேணி சென்றேன் . . .

பல வருடங்கள் கழித்து
திருவல்லிக்கேணி சென்றேன் . . .

சென்றேன் என்பது அஹம்பாவம் . . .
ஓ...அது என்றுமே வேண்டாம் . . . 

மீசைக்காரன் அழைத்தான் என்பதே சரி !

மீசைக்காரன். . .
வேறு யாருமே போட்டி போட முடியாத
ஒரு திருநாமம் . . .

என் பார்த்தசாரதியை அடியேன்
மீசைக்காரன் என்றுதான் எப்போதும்
கொஞ்சுவேன் . . .

அவனை நான் கண்ட சுகத்தை சொல்லவா . . . 

ராதேக்ருஷ்ணா. . .

திருமங்கையாழ்வார் பாடின
பார்த்தசாரதியை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

முறுக்கு மீசைக்காரனை,
ருக்மிணித் தாயாருடன்
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

 பார்த்தனுக்கு சாரதியானவனை
அண்ணன் பலராமனுடன்
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

கீதாசார்யனை, வேங்கட க்ருஷ்ணனை
சாத்யகியுடன்
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

ஆயர் குல சிகாமணியை,
பிள்ளை ப்ரத்யும்னனோடு
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

மாட்டுக்காரக் குறும்பனை
பேரன் அனிருத்தனோடு
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

பீஷ்மரின் அம்புகளால் ஏற்பட்ட
வடுக்களை சுமந்த சுந்தரனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

வண்டினம் பாட,மயில்கள் ஆட,
ரங்கத்தில் அரிதுயில் பயிலும் வித்தினை,
ஸ்ரீ ரங்கராஜனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . . 

இடக்கையில் பாஞ்சசன்னிய சங்கோடும்,
இடையில் உறை வாளோடும் நிற்கும் 
ஆயர் தம் கொழுந்தை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

பிரளயத்தில் உலகை உந்தியில்
கொண்ட பிரானை, ஆலிலைக் கண்ணனை
பச்சை வண்ண ஆடையில் 
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

வேதநாயகனை நெஞ்சில் சுமந்து,
தன்னை அவனை நெஞ்சில் சுமக்க வைத்த,
வேதவல்லித் தாயாரை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

ஆதி மூலமே என்றழைத்த வார்த்தை முடியும் முன்,
கதறிய யானையைக் காப்பாற்ற கருடனின் மேல் வந்த,
கஜேந்திர வரதனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

 ப்ரஹ்லாதனுக்காக தூணில் பிறந்து,
யோகத்தில் அமர்ந்த தெள்ளிய சிங்கமான,
அழகிய சிங்கனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்து,
ரங்கராஜனை ஆண்ட ஆண்டாளை,
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

கேசவ சோமாயஜி,காந்திமதி ப்ரார்த்தனைக்காக, 
எங்களுக்கு காரேய் கருணை இராமானுசனாக
வந்துதித்த, என்னை ஆளும் அப்பனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . . 

  வேதத்தை, வேதத்தின் சுவைப்பயனை
விழுங்கும் முனிவரின் தெய்வத்தை,
ஸ்வாமி விவேகானந்தனும் கடிதத்தில்
கொண்டாடின ஆதியை, அமுதை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

எங்களை 3 முறை அழைத்து, அழைத்து,
தரிசனம் தந்த ஒப்பாரும் மிக்காரும்
இல்லாத முறுக்கு மீசைக்காரனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

இந்த அழுக்குடம்பு,எச்சில் வாய்,
மல மூத்திர மாமிசப் பிண்டம் தந்த
செண்பகப் பூவையும் வாங்கிக்கொண்ட,
கருணா சாகரனை
திருவல்லிக்கேணி கண்டேனே . . .

நான் கண்டேனே . . .
இல்லை...இது பொய்...
அவன் என்னைக் கண்டான் . . .

என்னை கொள்ளையடித்தான். . .

அவன் முறுக்கு மீசைக்கு முன்
என் ஆண்மை தோற்றது . . .
நான் பெண்ணாக மாறினேன் . . .
அவனிடத்தில் காதல் கொண்டேன் . . .

அவன் அழகில் காமம் தலைக்கேற,
ஏன் ஆணாய் பிறந்தேன் என்று
கோபத்தில்,அழுகையில்,
துவண்டேன். . . துடித்தேன் . . .

அவன் என்னை தன்
காதலியாக ஏற்றுக்கொண்டான். . .

என்னை அவனிடத்தில் தந்தேன் . . .

இனி நான் பெண் . . .

முறுக்குமீசைக்காரனின் காதலி . . .

  
இனி என் திவ்ய தேசம் திருவல்லிக்கேணி . . .
இனி என் காதலன் பார்த்தசாரதி . . .
இனி என் சகோதரன் இராமானுஜன் . . .
இனி என் பிள்ளை ப்ரத்யும்னன் . . .
இனி என் பேரன் அநிருத்தன் . . .
இனி என் இளமை . . . மீசைக்காரனுக்கு . . .
இனி என் வாழ்க்கை . . . மீசைக்காரனின் ப்ரேமைக்கு . . .
இனி என்னுடையது என்பதே கிடையாது . . .

கரைந்து விட்டேன் . . .
என்னை கரைத்து விட்டான் . . .
என்னை திணற வைத்து விட்டான் . . . 
  
 இனியும் யாரும் இப்படி தோற்றுவிடாதீர்கள் . . .

இந்தப் பக்கம் மறந்தும் வராதீர்கள் . . .

வந்தால் நீயும் என்னைப் போல் புலம்புவாய் . . .

ஆனாலும் வா. . .
என் காதலனை உனக்கு நான் 
அறிமுகப்படுத்தி வைக்கிறேன் . . .

நீயும் காதல் வயப்படு . . .
எனக்கும் புலம்பத் துணை இல்லை . . .
வா . . .கூடியிருந்து குளிர்வோம் . . . வா


 

Read more...

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

வந்தே மாதரம் !


ராதேக்ருஷ்ணா



இது உலகின் தேசம் . . .
வந்தே மாதரம் !

இது நம் தேசம் . . .
வந்தே மாதரம் !

இது பக்த தேசம் . . .
வந்தே மாதரம் !

இது பக்தி தேசம் . . .
வந்தே மாதரம் !
 
 இது பாகவத தேசம் . . .
வந்தே மாதரம் !
 
இது ராமாயண தேசம் . . .
 வந்தே மாதரம்!

இது மஹாபாரத தேசம் . . .
வந்தே மாதரம் !
 
இது புண்ணிய தேசம் . . .
வந்தேமாதரம் !

இது ப்ரேம தேசம் . . .
வந்தே மாதரம் !
 
இது ரிஷிகளின் தேசம் . . .
வந்தே மாதரம் !
 
இது குரு தேசம் . . .
வந்தே மாதரம் !

இது சிஷ்ய தேசம் . . .
வந்தே மாதரம் !

இது வேத தேசம் . . .
வந்தே மாதரம் !

இது கோயில் தேசம் . . .
வந்தே மாதரம் !

இது சாஸ்திர தேசம் . . .
வந்தே மாதரம் !

இது ஞான தேசம் . . .
வந்தே மாதரம் !

இது வைராக்ய தேசம் . . .
வந்தே மாதரம் !

இது வீர தேசம் . . .
வந்தே மாதரம் !

இது பகவத் கீதா தேசம் . . .
வந்தே மாதரம் !

இது நாம ஜப தேசம் . . .
வந்தே மாதரம் !

இது ஸப்தாஹ தேசம் . . .
வந்தே மாதரம் !

இது நவாஹ தேசம் . . .
வந்தே மாதரம் !

இது கீத கோவிந்த தேசம் . . .
வந்தே மாதரம் !

இது நாராயணீய தேசம் . . .
வந்தே மாதரம் !

இது அபங்க தேசம் . . .
வந்தே மாதரம் !

இது பாராயண தேசம் . . .
வந்தே மாதரம் !

இது பூஜைகளின் தேசம் . . . 
வந்தே மாதரம் !

இது அர்ச்சனை தேசம் . . .
வந்தே மாதரம் !

இது அன்னதான தேசம் . . .
வந்தே மாதரம் !

இது கலாசார தேசம் . . .
வந்தே மாதரம் !

இது பரத நாட்டிய தேசம் . . .
வந்தே மாதரம் !

இது சங்கீத தேசம் . . .
வந்தே மாதரம் !

இது கலைகளின் தேசம் . . .
வந்தே மாதரம் !

இது சிற்பங்களின் தேசம் . . .
வந்தே மாதரம் !

இது மொழிகளின் தேசம் . . .
வந்தே மாதரம் !

இது யோகிகளின் தேசம் . . .
வந்தே மாதரம் !

இது ஞானிகளின் தேசம் . . .
வந்தே மாதரம் !

இது சித்தர்களின் தேசம் . . .
வந்தே மாதரம் !

இது வினய தேசம் . . .
வந்தே மாதரம் !

இது விவேக தேசம் . . .
வந்தே மாதரம் !

இது ஆனந்த தேசம் . . .
வந்தே மாதரம் !

இது அற்புத தேசம் . . .
வந்தே மாதரம் !

இது ப்ரும்ம தேசம் . . .
வந்தே மாதரம் !

இது தத்துவ தேசம் . . .
வந்தே மாதரம் !

இது சத்வ தேசம் . . .
வந்தே மாதரம் !

இது த்யான தேசம் . . .
வந்தே மாதரம் !

இது ஓம்கார தேசம் . . .
வந்தே மாதரம் !

இது தசாவதார தேசம் . . .
வந்தே மாதரம் !

இது புராண தேசம் . . .
வந்தே மாதரம் ! 
 
இது கர்ம தேசம் . . .
வந்தே மாதரம் !

இது யாக தேசம் . . .
வந்தே மாதரம் !

இது தியாகிகளின் தேசம் . . .
 வந்தே மாதரம் !

இது என் தேசம் . . .
வந்தே மாதரம் !

இது பாரத தேசம் . . .
வந்தே மாதரம் !

இது இந்து தேசம் . . .
வந்தே மாதரம் !
 
 இது பகவானின் தேசம் . . .
வந்தே மாதரம் !

ஜெய் ஹிந்த் !
வந்தே மாதரம் !
பாரத் மாதா கீ ஜெய் ! ! !



Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP