ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 பிப்ரவரி, 2017

உனக்கு அறிவு இருக்கிறதா ?!?

அரிது...அரிது...
பூமியில் பிறத்தல் அரிது...

அதனினும் அரிது...
மனிதராய் பிறத்தல் அரிது...

அதனினும் அரிது...
குருவைப் பற்றிக் கேட்டல் அரிது...

அதனினும் அரிது...
குருவைத் தேடுதல் அறிது...

அதனினும் அரிது...
குருவின் பார்வை அரிது...

அதனினும் அரிது...
குருவைப் பார்த்தல் அரிது...

அதனினும் அரிது...
குரு அருள் அரிது...

அதனினும் அரிது...
குருவைப் புரிதல் அரிது...

அதனினும் அரிது...
குருவை நம்புதல் அரிது...

அதனினும் அரிது...
குரு வார்த்தை கேட்பது அரிது...

அதனினும் அரிது...
குரு சொல்படி வாழ ஆசைப்படுவது அரிது...

அதனினும் அரிது...
குரு சொல்படி நடப்பது அரிது...

அதனினும் அரிது...
குரு சொல்படி எல்லாம் செய்வது அரிது...

அதனினும் அரிது...
குருவை தெய்வமாய் பார்ப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவை தெய்வத்தை விட
உயர்வாய் பார்ப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவுக்கு கைங்கரியம் செய்ய நினைப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவுக்கு கைங்கரியம் செய்யக் கிடைப்பது அரிது...

அதனினும் அரிது...
குருவுக்கு கைங்கரியம் செய்வது அரிது...

அதனினும் அரிது...
குரு உகக்கும்படி கைங்கரியம் செய்வது அரிது...

அதனினும் அரிது...
குருவோடு வாழ்வது அரிது...

அதனினும் அரிது...
குரு பெருமை உலகெலாம் செப்புவது அரிது...

அதனினும் அரிது...
குரு திருவடியில் உயிர் பிரிவது அரிது...

இப்போது புரிந்ததா...
மானிடராய் பிறத்தல் அரிது என்று ஏன் சொன்னாரென்று !!!

அரிதான பிறவியில்,
அறியாமை அழிக்கும் குருவை,
அறிவதே அறிவு...

உனக்கு அறிவு இருக்கிறதா ?!?

இல்லையா !!!!
குருவை அறி...

இருக்கிறதா !!!
உனக்கு நமஸ்காரம் !!!

Read more...

குரு அருள் !

குரு அருள் !!!

நாமே தடுத்தாலும்,
நம்மை தடுத்தாளும்....

நாமே விலகினாலும்,
நம்மை விலகாமல் காக்கும்...

நாமே ஒதுக்கினாலும்,
நம்மை ஒதுக்காமல் தொடரும்...

நாமே பரிகசித்தாலும்,
நம்மை மதித்து கூட இருக்கும்...

நாமே அவமதித்தாலும்,
நம் மீது அன்பைப் பொழியும்...

நாமே வெறுத்தாலும்,
நம் மீது உரிமையை நிலைநாட்டும்...

நாமே மறந்தாலும்,
நம்மை கரை சேர்க்கும்...

நாமே அவநம்பிக்கை கொண்டாலும்,
நம் மீது  அவநம்பிக்கை கொள்ளாது...

நாமே வீணடித்தாலும்,
நம்மை விடாமல் பலன் தரும்...

நாமாக தப்பித்தாலும்,
நம்மைத் தொடர்ந்து வரும்...

உலகமே நம்மை தள்ளினாலும்,
உள்ளிருந்து நம்மைத் தாங்கும் !

விதியே சதி செய்தாலும்,
மதி கொடுத்து வாழ வைக்கும் !

ஹே மனிதா !
குரு அருளே
குருடனான நம்மை,
குறைவில்லாமல்
வாழவைக்கும் !

குரு அருளுக்கு நீ ஒன்றும்,
ஒரு முயற்சியும் செய்யவேண்டாம் !

அது தானாய் வரும் !
அது தேடி வரும் !
அது சத்தியமாய் வரும் !

வரும்...உன்னை மாற்றும் !
அனுபவத்தில் சொல்கிறேன் !
குருவால் மாறினவன் சொல்கிறேன் !
குருவால் வளர்ந்தவன் சொல்கிறேன் !
குருவால் வாழ்கின்றவன் சொல்கிறேன் !

Read more...

வியாழன், 16 பிப்ரவரி, 2017

மன்னார்குடி ராஜகோபாலா காப்பாய் !

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னையே சரணடைந்தோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னிடமே கதறுகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னிடமே கெஞ்சுகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னையே நம்புகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னிடமே புலம்புகிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன் திருவருளையே கேட்கிறோம்...
எங்களை காப்பாற்று...

மன்னார்குடி ராஜகோபாலா...
உன்னை விட்டால் கதியில்லை...
எங்களை காப்பாற்று....

மன்னார்குடி ராஜகோபாலா...
உன் குழந்தைகள் நாங்கள்...

நீ தைரியம் தா...
நீ நம்பிக்கை தா...
நீ அமைதி தா...
நீ மனோபலம் தா...
நீ வரம் தா...
நீ நிம்மதி தா...

நீதான் சரி செய்யவேண்டும் !
உன்னால் முடியும் !
உன்னால் மட்டுமே சரி செய்யமுடியும் !

உன் அருளின் மழையில் நனைந்து,
ஆனந்தக் கண்ணீரில் மிதந்து,
கூச்சலிட்டு குதூகலமாய் நாங்கள் வாழும் நாளை,
எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்துக்கிடக்கிறோம்...

இப்படிக்கு...
உன் குழந்தைகள்....

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP