ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 ஜனவரி, 2012

உன் ஆசைப்படி . . .


ராதேக்ருஷ்ணா


ஜெய் ஸ்ரீ பூவராஹா . . .
ஜெய் ஸ்ரீ லக்ஷ்மி வராஹா . . .
ஜெய் ஸ்ரீ ஆதி வராஹா . . .


ஜெய் ஸ்ரீ திருவிடவெந்தை வராஹா . . .


வராஹ மூர்த்தியே . . .
உமக்கு நமஸ்காரம் ! ! !

நீ மட்டுமே இந்த பூமிக்கு
சொந்தக்காரன் . . .


நாங்கள் எல்லோரும்
இங்கே வாடகைக்கு
வாழ்கின்றோம் . . .


எங்கள் இஷ்டப்படி
வாழ்கின்றோம் . . .


நாங்கள் யாரும்
உன் இஷ்டப்படி வாழ்வதில்லை !


எங்களை மன்னித்துவிடு . . .


ஒரு நாள் அஹம்பாவத்தில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் தற்பெருமையோடு
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் பயத்தில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் கோபத்தில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் குழப்பத்தில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் துன்பத்தோடு
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் சண்டையோடு
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் வெட்டியாய்
வாழ்கிறோம் . . .

ஒரு நாள் உற்சாகத்தோடு
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் வெறுப்போடு
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் காமத்தில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் பொறாமையில்
வாழ்கிறோம் . . .


ஒரு நாள் புலம்பலில்
வாழ்கிறோம் . . .


மறந்து போய் சில நாள்
பக்தியோடு வாழ்கிறோம் . . .


ஏதோ சில நாள்
நாமஜபத்தோடு வாழ்கிறோம் . . .


எங்கள் வாழ்க்கையை
நாங்கள் மதிக்கவுமில்லை . . .
கொண்டாடுவதுமில்லை . . .
உபயோகப்படுத்துவதுமில்லை . . .


ஆனாலும் ஹே பூவராஹா . . .
உன் பூமியில் எங்களுக்கு
வாழும் அதிகாரம் தந்திருக்கிறாய் . . .


உனக்கு எப்படி நன்றி
சொல்வது என்று
எனக்குத் தெரியவில்லை . . .


உன் ஆசைப்படி ஒரு
நாளாவது நான் இந்த
வாழ்வில் வாழ ஆசி கூறு . . .

உன் ஆசை என் ஆசையாகட்டும் !

 அப்பொழுது தான் உன் மஹிமை
எனக்குப் புரியும் !



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP