ஆஹா . . .ஆஹா. . . ஆஹா . . .
ராதேக்ருஷ்ணா
ஆராவமுதா . . .
ஏனடா இப்படிப் படுத்திருக்கிறாய் !
சார்ங்கபாணி . . .
எத்தனை அழகாகப் படுத்திருக்கிறாய் !
குடந்தை அழகா . . .
குழந்தை போலே படுத்திருக்கிறாய் !
கோமளவல்லி நாதா . . .
தலை தூக்கி சுகமாய் படுத்திருக்கிறாய் !
திவ்யப்ரபந்தம் தந்த நாயகா . . .
என்னைப் படுத்தவே படுத்திருக்கிறாய் !
நாதமுனி ப்ரியா . . .
ஆதிசேஷனின் மேல் படுத்திருக்கிறாய் !
செந்தாமரைப் பாதனே . . .
நீ வாழ்க . . .
கிடந்தவாறு பேசும் அற்புதமே . . .
நீ வாழ்க . . .
கும்பகோணத்தின் ராஜனே . . .
நீ வாழ்க . . .
நான் உன்னைப் பார்க்காமல்
போனாலும்,நீயே என்னை
உன் பக்கம் இழுத்தாயடா . . .
என் செல்லமே . . .
சத்தியமாய் நீ பக்தரை
பரவசப்படுத்தும் பெருமாள் தான் . . .
திருமழிசை ஆழ்வாரை
புலம்ப வைத்த சமத்தே . . .
ஸ்வாமி நம்மாழ்வாரை
ஆராவமுதே என பரவசப்படவைத்த
கருமாணிக்கமே . . .
என்னையும் உன் கோஷ்டியில்
வைத்துக்கொண்டாயே . . .
எத்தனை கருணை உனக்கு . . .
ஆஹா . . .ஆஹா. . . ஆஹா . . .
நீயும் அழகு . . .
உன் கோயிலும் அழகு . . .
உன் ஊரும் அழகு . . .
உன் காவிரியும் அழகு . . .
உன் ப்ரபந்தங்களும் அழகு . . .
உன் பக்தர்களும் அழகு . . .
உன் தேவியும் அழகு . . .
உன் யானையும் அழகு . . .
உன் கோபுரமும் அழகு . . .
உன் வீதியும் அழகு . . .
உன்னோடு சேர்ந்த எல்லாமே அழகுதான் . . .
நான் உட்பட . . .
உன்னைப் பார்த்தவுடன்
எழுத ஆரம்பித்த இதை
ஒன்பது நாள் கழித்து
முடிக்க வைத்து,
உன்னை மறவாமல்
நினைக்க வைக்கச் செய்த
உன் லீலையோ அழகோ அழகு ! ! !
கிடந்தவாறு பேசும் அற்புதமே . . .
நீ வாழ்க . . .
கும்பகோணத்தின் ராஜனே . . .
நீ வாழ்க . . .
நான் உன்னைப் பார்க்காமல்
போனாலும்,நீயே என்னை
உன் பக்கம் இழுத்தாயடா . . .
என் செல்லமே . . .
சத்தியமாய் நீ பக்தரை
பரவசப்படுத்தும் பெருமாள் தான் . . .
திருமழிசை ஆழ்வாரை
புலம்ப வைத்த சமத்தே . . .
ஸ்வாமி நம்மாழ்வாரை
ஆராவமுதே என பரவசப்படவைத்த
கருமாணிக்கமே . . .
என்னையும் உன் கோஷ்டியில்
வைத்துக்கொண்டாயே . . .
எத்தனை கருணை உனக்கு . . .
ஆஹா . . .ஆஹா. . . ஆஹா . . .
நீயும் அழகு . . .
உன் கோயிலும் அழகு . . .
உன் ஊரும் அழகு . . .
உன் காவிரியும் அழகு . . .
உன் ப்ரபந்தங்களும் அழகு . . .
உன் பக்தர்களும் அழகு . . .
உன் தேவியும் அழகு . . .
உன் யானையும் அழகு . . .
உன் கோபுரமும் அழகு . . .
உன் வீதியும் அழகு . . .
உன்னோடு சேர்ந்த எல்லாமே அழகுதான் . . .
நான் உட்பட . . .
உன்னைப் பார்த்தவுடன்
எழுத ஆரம்பித்த இதை
ஒன்பது நாள் கழித்து
முடிக்க வைத்து,
உன்னை மறவாமல்
நினைக்க வைக்கச் செய்த
உன் லீலையோ அழகோ அழகு ! ! !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக