ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 நவம்பர், 2011

ஏமாறுவாயா ? ? ?.

ராதேக்ருஷ்ணா

ஏமாறாதே . . .

ஏமாற்றுக்காரர்களிடம்
விட்டுக்கொடுக்காதே . . .

ஏமாற்றுக்காரர்களிடம்
பயப்படாதே . . .

ஏமாற்றுக்காரர்களிடம்
பணிந்துபோகாதே . . .



ஏமாற்றுக்காரர்களிடம்
தோற்றுப்போகாதே . . .




ஏமாற்றுக்காரர்களை
அடையாளம் கண்டு கொள் . . .




ஏமாற்றுக்காரர்களுக்கு
உதவாதே . . .




ஏமாற்றுக்காரர்களை
நம்பாதே . . .




ஏமாற்றுக்காரர்களை
வென்று காட்டு . . .




நீ ஏமாறாதே . . .
ஒரு நாளும் ஏமாறாதே . . .
ஒருவரிடமும் ஏமாறாதே . . .




நீ ஏமாறக்கூடாது . . .


இனி நீ ஏமாறாமாட்டாய் . . .


யோசி . . .
தெளிவாக யோசி . . .


உன் வாழ்வைத்
தெளிவாக யோசி . . .


எல்லாவற்றையும்
ஜெயிக்க யோசி . . .



Read more...

செவ்வாய், 22 நவம்பர், 2011

எழுதியே தீருவேன் . . .

ராதேக்ருஷ்ணா
இத்தனை நாள்
ஏன் ஆனந்தவேதம்
எழுதவில்லை . . .

பெருமைக்காக
எழுதவில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .



எழுதித்தான் ஆகவேண்டுமென்ற
கட்டாயமில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .



என் எழுத்தினால் யாரையும்
வசப்படுத்தவேண்டிய அவசியமில்லை . . .
அதனால் இதுவரை
எழுதவில்லை . . .



சில நாள் தினமும்
எழுதினேன் . . .
என் கண்ணன் சொன்னான் . . .
எழுதினேன் . . .



பல நாள் எழுதவில்லை . . .
என் கண்ணன் எனக்காக மட்டுமே
சொன்னான் . . .
அதனால் எழுதவில்லை . . .



இன்று எழுதச் சொல்கிறான் . . .
எழுதுகிறேன் . . .



பக்தி என்பதும்,பகவான் என்பதும்
உலகில் நம்மை நிரூபிக்க இல்லை . . .



என் பக்தி எனக்காக . . .
என் கண்ணன் எனக்காக . . .



உலகில் நான் பக்தன்
என்று என்னை நிரூபிக்க
எனக்கு அவசியமில்லை . . .



ஏன் ! உனக்கும் கூடத்தான் . . .

நான் என் கண்ணனை
அனுபவிக்கவேண்டும் . . .

நீ உன் கண்ணனை
அனுபவிக்கவேண்டும் . . .



நாம் உலகிற்க்காக
இதைச் செய்தால்
பக்தி வியபசாரம் ஆகிவிடும் . . .



யாரையும் திருப்திபடுத்த
நாம் பக்தி செய்யவேண்டாம் . . .



நாம் நம்மை புரிந்துகொள்ளவும்,
கண்ணனை அனுபவிக்கவுமே
பக்தி . . .



பக்தி நிர்பந்தமல்ல . . .
பக்தி வெளிவேஷமல்ல . . .
பக்தி கட்டாயமல்ல . . .



மீரா தனக்குத் தோன்றும்போதே
பாடல்கள் பாடினாள் . . .



தியாகராஜர் தான் ராமனை
அனுபவிக்கும்போதே
பாடல்கள் எழுதினார் . . .



அதுபோல் என் மனதில்
கண்ணன் தூண்டும்போதே
நானும் ஆனந்தவேதம்
எழுதுகிறேன் . . .


நீ என்ன பெரிய மீராவா ?
நீ என்ன உயர்ந்த தியாகராஜரா ?
என்று நீ நினைக்கலாம் . . .


அதுபற்றி எனக்குத் தெரியாது . . .
தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன் ?


எனக்குத் தெரிந்தது ஒன்றுதான் . . .


நான் க்ருஷ்ணனின் குழந்தை . . .
இந்த நினைவு எனக்குப் போதும் . . .



இது அஹம்பாவமல்ல . . .
சத்தியம் . . .

கண்ணன் எழுதச் சொல்லும் வரை
எழுதியே தீருவேன் . . .


Read more...

புதன், 2 நவம்பர், 2011

வேட்டையாடத் தயார் . . .

ராதேக்ருஷ்ணா
வேட்டைக்கு தயார் . . .

என் பத்மநாபன்
வேட்டைக்குத் தயாராகிவிட்டான் !

கெட்டவர்களின் பாவத்தை
வேட்டையாடத் தயார் . . .

பக்தர்களின் கஷ்டங்களை
வேட்டையாடத் தயார் . . .
ஏழைகளின் தரித்திரத்தை
வேட்டையாடத் தயார் . . .

பணக்காரர்களின் அஹம்பாவத்தை
வேட்டையாடத் தயார் . . .

பதவியிலிருப்பவரின் சுயநலத்தை
வேட்டையாடத் தயார் . . .

தற்பெருமையாளர்களின் பெருமையை
வேட்டையாடத் தயார் . . .

கயவர்களின் கயமையை
வேட்டையாடத் தயார் . . .

தேசத்துரோகிகளின் துரோகத்தை
வேட்டையாடத் தயார் . . .

பயந்தாங்கொள்ளிகளின் பயத்தை
வேட்டையாடத் தயார் . . .
அறிவிலிகளின் அஞ்ஞானத்தை
வேட்டையாடத் தயார் . . .
வேட்டையாடப் போகிறான் . . .
விளையாடப் போகிறான் . . .

இதோ கிளம்பிவிட்டான் . . .

என் அனந்தபத்மநாபன் . . .

திருவனந்தபுரத்தில் . . .


உலகைக் காக்க ஒரு வேட்டை . . .

உன்னதமான ஒரு வேட்டை . . .

உத்தமனின் வேட்டை . . .

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP