போகியன்று நீ யோகியாவாய் !
தாகத்தினால் போகம் அடைந்தாய் !
போகத்தில் திளைத்து போகியானாய் !
போகியானதால் நீ ரோகம் அடைந்தாய் !
ரோகத்தினால் நீ ரோகியானாய் !
ரோகம் நீங்க க்ருஷ்ணனிடம் மோகம் கொள் !
மோகம் கொண்டால் நீ யோகியாவாய் !
யோகியானால் உன்னுள்ளே கண்ணன் !
யோகமே கண்ணனென்று அறிவாய் !
யோகத்தில் சோகத்தை அழிப்பாய் !
சோகத்தை அழிக்கவே யாகம் !
யாகமே போகி !
போகியன்று நீ யோகியாவாய் !
©குருஜீ கோபாலவல்லிதாசர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக