ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

காவிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவிரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 ஏப்ரல், 2018

643. காவிரி !

காவிரி !

நம் அன்னை !
நம் பாரதத்தின் சொத்து !

காவிரியின் மடியில்,
தமிழர்களும், கன்னடர்களும்
என்றுமே குழந்தைகள் !

மூத்த பிள்ளைக்கும்,
இளைய பிள்ளைக்கும்,
தாய் பேதம் பார்ப்பதில்லை !

காவிரியை தெய்வமாய் பார்ப்பவர்கள்,
அவளை வைத்து வியாபாரம் செய்வதில்லை !
அரசியல் செய்வதில்லை !

காவிரியை பிரச்சனையாய்
பார்ப்பவர்களாலேயே,
காவிரி மஹிமை
புரிவதில்லை !

காவிரியை அன்னையாய்
பார்ப்பவர்களால்
பிரச்சனைகள்
வருவதில்லை !

காவிரியாலேயே
தமிழகமும்,
கர்நாடகமும்
வாழ்கிறது !

காவிரியே...
தமிழக,
கர்நாடக
விவசாயிகளுக்கு
என்றுமே
நன்மை செய்வாள் !

காவிரி...
கருணையின் உரு !

காவிரி...
தெய்வீகத்தின் உரு !

காவிரி...
விளைச்சளின் கரு !

நாம் பிரார்த்திப்போம் !
காவிரியால்
தமிழகமும்
கர்நாடகமும்...
இன்னும் அன்பைப்
பறிமாற....

காவிரியால்
ஒற்றுமையே வளரும்...
காவிரியால்
நாட்டில் குழப்பத்தை
விளைவிப்பவரிடம்
இருந்து தேசத்தை
நாம் காப்போம் !

காவிரியில்...
தேவையான தண்ணீர்
எல்லோருக்கும்
கிடைக்கட்டும்...

காவிரி....
இனி எல்லோருக்கும்
அன்பை,
அழகை,
விளைச்சலை,
பாசத்தை,
நிம்மதியை,
ஆனந்தத்தையே...
தர நாம் பிரார்த்திப்போம்...

என்றோ ஆரம்பித்த,
காவிரி விவகாரம்...
நம் தலைமுறையோடு
நிரந்தரமாக முடியட்டும்...

எதிர்காலம்....
காவிரியின் கரையில்,
அமிருதமான தண்ணீரில்,
நிம்மதியாய்
வாழட்டும்....

இந்தக் காவிரிக் கவிதை...
இத்தனைக்கும்
நடுவில்,
அனைவரையும்,
வாழவைக்கத்துடித்து,
ஜீவ நதியாய்...
ஓடிக்கொண்டிருக்கும்
காவிரிக்கு
சமர்ப்பணம்...

Read more...

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஆடிப்பெருக்கு !

ஆடிப்பெருக்கு...
காவிரி பெருக அருள் செய் ரங்கா...

ஆடிப்பெருக்கு...
யாரிடம் கெஞ்சவேண்டும்
என்கிறாய்...
மற்றவரிடமா...
உன்னிடமா...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
எங்களுக்குத் தான்
பொறுப்பில்லை...
அக்கரையுமில்லை...
உனக்குண்டே...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
காவிரி காய்ந்தால்
யாருக்கு அவமானம்...
எங்களுக்கா ?!?
உனக்கா ?!?
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
நாங்கள் வந்தோம்...
போய்விடுவோம்...
நீ தான் இங்கே நிரந்தரம்...
உனக்குத்தான் காவிரி...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
எங்களைவிட
காவிரியை
அனுபவித்தவன்,
அனுபவிப்பவன்,
அனுபவிக்கப்போகிறன்...
நீயே...
ரங்கா....

ஆடிப்பெருக்கு...
ஆழ்வார்கள் சொல்..
மறந்ததோ...
திருப்பாணன் பாடல்
மறந்ததோ...
காவிரி மஹிமை...
மறந்தனையோ...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
ஆளவந்தார் குளித்ததும்
பொய்யோ...
எங்கள் யதிராசன்
தவராசன் படித்துறையும் பொய்தானோ...
மௌனமேன்...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
காவிரியின் அலைக்கை
வருடல் கசந்ததோ...
மணல் கை வருடல்
சுகமானதோ...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
ஸ்ரீரங்கம் பூலோக
வைகுண்டமாமே...
காவிரி விரஜா
நதியாமே...
விரஜையில் மண்தான்
இருக்குமோ...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
சித்திரான்னம் போதுமோ...
வயல் விளைய
வேண்டாமோ...
உன் நெல் உண்டியல்
நிரம்பவேண்டாமா...
ரங்கா....

ஆடிப்பெருக்கு...
உனக்கே அக்கறையில்லை
என்றால்,,,
என்ன செய்ய...
யாரிடம் சொல்ல...
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
இந்த ஆடிப்பெருக்கில்,
எங்கள் கண்ணீரே,,,
பெருகுகிறது...
இனிவரும் காலமெல்லாம்...
காவிரி பெருகட்டும்...
மனம் குளிர...
வயிறு குளிர...
மண் குளிர...
ஆழ்வார் குளிர...
பெருகட்டும்....
ரங்கா...

ஆடிப்பெருக்கு...
அடி ரங்கநாயகி...
உன் கணவனிடம்...
ஏதேதோ, வாயில்
வந்தபடியெல்லாம்...
பேசிவிட்டேன்...
நீதான் அரங்கனுக்கு
எடுத்துச் சொல்லி...
அவர் பெயரைக்
காப்பாற்றிக்கொள்...

Read more...

சனி, 28 ஆகஸ்ட், 2010

நான் பரிசுத்தமானேன் . . .

ராதேக்ருஷ்ணா

ஸ்ரீ ரங்கா . . .
ஸ்ரீ ரங்கநாதா . . .
ஸ்ரீ ரங்கராஜா . . .
பெரிய பெருமாளே . . .
நம் பெருமாளே . . .
ஆபரணத்திற்கு அழகு
சேர்க்கும் பெருமாளே . . .
பதின்மர் பாடிய அழகா . . .
   

பூலோக வைகுண்டமான 
ஸ்ரீ ரங்கம் வாழ்க . . .

என் அரங்கத்து இன்னமுதர் 
ஸ்ரீ ரங்கநாதன் வாழ்க . . .

படிதாண்டா பத்தினி,புருஷ கார பூதை 
ஸ்ரீ ரங்கநாயகி வாழ்க . . .

தானான திருமேனி,உடையவர், 
ஸ்ரீ யதிராஜன் வாழ்க . . .

பெரிய பெருமாளின்,பெரிய திருவடி 
ஸ்ரீ கருடாழ்வார் வாழ்க . . .

கம்பனின் ராமாயணத்தை ஏற்ற 
ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் வாழ்க . . .

பக்தர்களை வசீகரிக்கும் 
 ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வாழ்க . . .

ஜனங்களின் வியாதிகளைத் தீர்க்கும்
ஸ்ரீ தன்வந்திரி வாழ்க . . .

அமைதியாய் அனுக்ரஹிக்கும்
அம்ருத கலச கருடன் வாழ்க . . .

விஸ்வரூப தரிசனத்திற்கு,
ஸ்ரீ ரங்கராஜன் தரிசிக்கும் கோமாதா வாழ்க . . .

 காலையில் ஸ்ரீ ரங்கராஜனை எழுப்ப
வீணைவாசிப்பவர் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜன் என்னும் யானையின்
செல்ல யானை வாழ்க . . .

ஸ்ரீ ரங்க விமானத்தில் வாசம் செய்யும்
பரவாசுதேவர் வாழ்க . . .

தினமும் ஸ்ரீ ரங்கராஜனுக்கு பூஜைகள்
செய்யும் பட்டர்கள் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனின் கோயிலின்
கைங்கர்ய பரர்கள் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனின் திருக்கோயிலின்
வாயில் காப்போர்கள் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனின் திருமாளிகையை
சுத்தம்செய்யும் பாக்கியவதிகள் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனே கதி என்றிருக்கும்
பக்தகோடிகள் வாழ்க . . .

ஸ்ரீரங்கராஜனின் திருவடிகளோடு
விளையாடும் காவிரித்தாய் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனுக்காக அழுத
ஸ்வாமி நம்மாழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனுக்கு மாமனரான
ஸ்ரீ பெரியாழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனோடு ஐக்கியமான
திருப்பாணாழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனுக்கு மதில் கைங்கர்யம்
செய்த திருமங்கையாழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனே என் தெய்வம் என்ற
தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனுக்காக ராஜ்ஜியத்தையும் துறந்த
ஸ்ரீ குலசேகர ஆழ்வார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனிடத்தில் மனதைக் கொடுத்த
முதலாழ்வார்கள் மூவரும் வாழ்க . . .

இவளை நான் கரம் பிடிக்கப் போகிறேன்
என்று ஸ்ரீ ரங்கராஜனையே சொல்ல வைத்த
எங்கள் ராஜாத்தி ஆண்டாள் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனை முகம்மதிய வழக்கப்படி
லுங்கி (சாரம்) அணிய வைக்கும்
அழகு துலுக்க நாச்சியார் வாழ்க . . .

ஸ்ரீ ரங்கராஜனை தன் கணவனாக
வரித்த குலசேகரவல்லி வாழ்க . . .
ஸ்ரீ ரங்கராஜனுக்குப் புஷ்பங்கள் தரும்
திருநந்தவனம் வாழ்க . . .


ஸ்ரீரங்கராஜனின் செல்லக் குளியல் தொட்டி
சந்திர புஷ்கரினி வாழ்க . . .


ஸ்ரீ ரங்கராஜனின் கோயிலில் வசிக்கும்
குரங்கினமும்,புறாக்களும்,கிளிகளும்,
குயில்களும்,பூனைகளும்,
மற்ற ஜந்துக்களும் வாழ்க . . .


ஸ்ரீ ரங்கராஜனின் ஸ்ரீ ரங்க வீதிகளில்
வசிக்கும் பாக்கியவான்கள் வாழ்க . . .


ஸ்ரீ ரங்கம் வாழ்க . . .
என் மணிவண்ணன் ஸ்ரீ ரங்கன் வாழ்க  . . .


பல்லாயிரம், பல்லாயிரம்,
பலகோடி நூறாயிரம் ஆண்டுகள்
வாழ்க . . . வாழ்க . . , வாழ்க . . .


ஸ்ரீ ரங்க ஐஸ்வர்யத்திற்கு
திருக்காப்பு . . .


ஸ்ரீ ரங்கராஜனுக்கு திருக்காப்பு . . .
ஸ்ரீ ரங்கநாயகிக்கு திருக்காப்பு . . .
ஸ்ரீ யதிராஜனுக்கு திருக்காப்பு . . .


ஹே ரங்கா . . .ஸ்ரீ ரங்கா . . . ரங்க ரங்கா  . . .


ஆனந்தம் . . .பரமானந்தம் . . .ப்ரும்மானந்தம் . . .


போதும் . . .
இனி வேறென்ன வேண்டும் . . .
ஆஹா . . . என் ஆணவம் அழிந்தது . . .
என் கௌரவம் ஒழிந்தது . . .
என் சுயநலம் ஓடி ஒளிந்தது . . .


நான் பரிசுத்தமானேன் . . .


இனி ஒரு குறையில்லை . . .


மணிவண்ணா . . .
ரங்கா . . . நீ வாழ்க . . .





  

Read more...

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP