ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 அக்டோபர், 2009

செல்லக் குழந்தை!



ராதேக்ருஷ்ணா 

எதையோ நினைத்துப் புலம்பாதே!
யாரையோ நினைத்து அழாதே!
வாழ்க்கையை நினைத்துப் பயப்படாதே!
மனதில் ஆசைவயப்பட்டு உளறாதே!
நினைத்தது நடக்காவிட்டால் 
கோபப்படாதே!
நினைக்காதது நடந்துவிட்டால் 
நொந்துபோகாதே!
அவமானப்படுத்தினால் கலங்காதே!
 ஒதுக்கிவைத்தால் ஓய்ந்துபோகாதே!
மனிதர்களை நினைத்து 
உன் வாழ்க்கையை இழக்காதே !
அத்ருஷ்டத்தை நினைத்து
முயற்சியை விடாதே!
கைரேகையை நம்பி
க்ருஷ்ணனை தொலைத்துவிடாதே!
ராசிக்கல்லை வைத்துக்கொண்டு
 எல்லாம் கிடைக்குமென்று
கனவு காணாதே ! 
உன் ஜாதகத்தைக் கணித்துவிட்டு
வாழ்க்கையை முடிவு  செய்யாதே! 
 உன் பெயரை மாற்றினால்
எல்லாம் மாறுமென்று நினைக்காதே !
உன் ராசி பலனை அறிந்துகொள்ளாதே! 

  உன்னிடம் என்ன இல்லை?
உன்னிடம் எல்லா நல்லவைகளும்
நீக்கமற நிறைந்து உள்ளது !
அதை புரிந்து கொள் ! 

நீ அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட
நாயகன் க்ருஷ்ணனுக்கும்,
அன்பு வடிவான ராதிகாவுக்கும்
பிடித்த செல்லக் குழந்தை! 
  
அவர்களைத் தவிர வேறு
யார் உன்னை நன்றாக
அறிவார்கள் !

"ராதேக்ருஷ்ணா"
இந்த மந்திரம் போதும் !
உன் வாழ்க்கை நிம்மதியாக நடக்கும்! 


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP