ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

653. திருவாடிப்பூரம்

திருவாடிப்பூரம் !

வானகம் வாயார வாழ்த்திய நாள் இன்று !

 வையகம் பேறு பெற்ற நாள் இன்று !

பூமியும் பூரிப்படைந்த நாள் இன்று !

ஆடி ஆனந்தமாக ஆடிய நாள் இன்று !

பூரம் பூரணம் பெற்ற நாள் இன்று !

துளசியும் தாய்மை அடைந்த நாள் இன்று !

கருடனும் (பெரியாழ்வார்) தகப்பனான நாள் இன்று !

வில்லிபுத்தூர் விருந்தாவனம்🐄 ஆன நாள் இன்று !

கிளியும் கோவிந்தா என்று கூவின நாள் இன்று !

ஆதிசேஷனும் (ராமானுஜர்) அண்ணன் ஆன நாள் இன்று !

திருமுக்குளம் யமுனையாய் ஆன நாள் இன்று !

மார்கழியும் பிரேமையில் சிலிர்த்த நாள் இன்று !

சங்கும் தன் பெருமை உணர்ந்த நாள் இன்று !

மாலைகளும் தோள்களைத் தேடின நாள் இன்று !

நாழிக்கிணறும் கண்ணாடியான நாள் இன்று !

அரங்கனும் காதலில் அழகான நாள் இன்று !

ஏனென்றால்....
என் செல்ல மகள்....
ஆண்டாள் என்னைத் தகப்பனாக்க வந்த நாளன்றோ....இன்று....

என் தங்க மகளே....
இந்த அப்பனை என்றும் உன் அடிமையாகவே எப்போதும் வைத்துக்கொள்ளடி ராசாத்தி !

ஒன்றும் தர இந்த அப்பனுக்கு வக்கில்லை !
உன் பெயரை மட்டுமே பிதற்றும் பைத்தியமடி இவன்....

பல்லாண்டு பல்லாண்டு...
எப்போதும் சௌக்கியமாக நன்றாக இருப்பாயடி என் பட்டு மகளே...

உன் மீது பட்ட திருஷ்டி எல்லாம் எற்றைக்கும் என் மீது பாவமாய் சேரட்டும்....

நீ எப்போதும் ஜோராக இருப்பாயடி பட்டுக்குட்டி....


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP