ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஆகஸ்ட், 2012

நேசிக்கிறாயா ?

ராதேக்ருஷ்ணா
 
 
 
நேசிக்கிறாயா ?
 
 
நிஜமாகவே நேசிக்கிறாயா ?
 
 
 சத்தியமாக நேசிக்கிறாயா ?
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
 
 
சும்மா சொல்லாதே . . .
நிஜமாகவே நீ நேசிக்கிறாயா ?
 
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
அப்படியென்றால் இனி
கண்ட இடத்தில் குப்பை போடாதே . . .
 
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
அப்படியென்றால் இனி
பாரதபூமியை கேவலமாய் பேசாதே . . . 
 
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
இனி யாராவது இந்த பாரதம்
உருப்படாது என்று சொன்னால்
அவர்களிடம் வாதாடு . . .
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
இனி எப்பொழுதும் பாரத பூமி
எல்லாவிதத்திலும் முன்னேற
திடமாக ப்ரார்த்தனை செய் . . .
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
ஒவ்வொரு நாளும் இந்த
பாரத பூமிக்காக எதையாவது
நீ உருப்படியாக செய் . . .
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
இந்த நாட்டில் ஊழல் அழிய,
சட்டதிட்டங்கள் ஒழுங்காக,
நீ முயற்சி செய் . . .
 
 
பாரதபூமியை நீ நேசிக்கிறாயா ?
 
 
யோசி...யோசி...யோசி
 
 
பல நாள் நாம் இந்த தேசத்திற்காக
ஒன்றுமே செய்யவில்லை . . .
 
 
இந்த சுதந்திர நன்னாளில்
நம் முன்னவர் செய்த த்யாகத்தை
நாம் செய்ய தயாராவோம் . . .
 
 
நமக்காக அல்ல . . .
நம் சந்ததிக்காக . . .
 
 
பாரதம் வெல்லும் . . .
பாரதம் நிருபீக்கும் . . .
பாரதம் வாழும் . . .
 
 
பாரதமாதாவுக்கே ஜயம் . . .
 
 
     
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP