ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

வேறு ஒரு வேலையில்லை !

ராதேக்ருஷ்ணா
 
 
 
என் தலை மீது
அனந்த பத்மநாபனின்
அபய ஹஸ்தம் இருக்கிறது !
எனக்கு என்ன கவலை !!!
 
 
 
என் வாழ்வில்
அனந்த பத்மநாபனின்
பூரண அனுக்ரஹம் இருக்கிறது !
எனக்கு என்ன கஷ்டம் !!!
 
 
 
 என்னோடு என்றும்
அனந்த பத்மநாபனின்
உன்னதமான அன்பு இருக்கிறது !
எனக்கு என்ன தேவை !!!
 
 
 
என் மனதில் என்றும்
அனந்த பத்மநாபன்
சத்தியமாய் இருக்கிறான் !
எனக்கு என்ன யோசனை !!!
 
 
 
என் நாவில் எப்பொழுதும்
அனந்த பத்மநாபனின்
திருநாமம் நிறைந்திருக்கிறது !
எனக்கு என்ன தொந்தரவு !!!
 
 
 
என்னோடு எங்கும்
அனந்த பத்மநாபன்
கூடவே வருகிறான் !
எனக்கு என்ன பயம் !!!
 
 
 
எனக்கு வரும் பிரச்சனைகளில்
அனந்த பத்மநாபன்
அற்புதமாக முடிவு எடுக்கிறான் !
எனக்கு என்ன குழப்பம் !!!



என்னுடைய தேவைகளை
அனந்த பத்மநாபன்
மிகவும் நன்றாக அறிவான் !
எனக்கு என்ன சிந்தனை !!!



என்னுடைய ப்ராரப்த கர்மாவை
அனந்த பத்மநாபன்
கவனித்துக்கொள்கிறான் !
எனக்கு என்ன ப்ரயத்தனம் !!!



எனக்கு இந்த வாழ்வில்
ஒரு வேலையுமில்லை ! ! !
அனந்தபத்மநாபனின் கருணையை
அனுபவிப்பதைத் தவிர
வேறு ஒரு வேலையில்லை ! ! !


இந்த வேலையை ஒழுங்காகச்
செய்யவே நான் இங்கே வந்திருக்கிறேன் !



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP