இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 25 ஜூன், 2026
செவ்வாய், 3 மே, 2022
661. அக்ஷய திருதியை
சனி, 11 டிசம்பர், 2021
660. வாய்ப்பு
புதன், 3 நவம்பர், 2021
659. தீபாவளி
ஞாயிறு, 17 அக்டோபர், 2021
658. இமயமே !
வியாழன், 16 செப்டம்பர், 2021
657. கண்ணனுக்கு சமர்ப்பணம்
புதன், 15 செப்டம்பர், 2021
656. இது போதும் எனக்கு !
இன்றைய விடியலில்,
எனக்கும் வாழ்வுண்டு !
இன்று ☀️ சூரியன்,
எனக்காகவும் உதித்தது !
இந்தக் காற்று,
எனக்காகவும் வீசுகிறது !
சுழலும் 🌏 பூமிப்பந்தில்,
எனக்கும் இடமுண்டு !
இந்த ஆகாயம்,
எனக்கும் கூறையாகிறது !
இன்றைய உணவில்,
எனக்கும் பங்குண்டு !
தாகத்திற்கான தண்ணீரில்
என் பெயரும் உண்டு !
மானம் மறைக்கும் உடை,
என் உடலுக்கும் உண்டு !
இன்றைய வெய்யிலில்,
எனக்கும் வெப்பம் உண்டு !
இன்றைய குளிரில்,
எனக்கும் குளிர்ச்சி உண்டு !
இன்றைய மழையில்,
எனக்கும் சிறுதுளி உண்டு !
பரந்து விரிந்த கடலை,
நானும் ரசிக்க உரிமையுண்டு !
மரங்களின் நிழலில்,
நானும் ஒதுங்க இடமுண்டு !
சிரிக்கும் மலர்கள் 🌹
எனக்கும், வாசம் வீசும் !
பறவைகளின் 🐦 நாதம்,
என் செவிக்கும் உண்டு !
ஓடும் மேகங்கள்,
என் தலைமீதும் ஓடும் !
இன்றைய ஆசீர்வாதங்கள்,
என் மீதும் பொழிகிறது !
காணும் அழகெல்லாம்,
எனது கண்களுக்கும் உண்டு !
இன்றிரவு சந்திரன்,
எனக்கும் ஒளி வீசும் !
இன்றிரவு நக்ஷத்திரங்கள்,
எனக்காகவும் மின்னும் !
இன்றைய க்ருஷ்ண அனுபவத்தில்,
எனக்கும் அனுபவம் உண்டு !
இந்த நாள் மிகச்சிறந்த நாளே !
எல்லா நாளும் அற்புத
நாளே !
இறைவன் தந்த வரம் இந்த நாள் !
இந்த நேரம் !
இந்த நிமிடம் !
இந்த நொடி !
எல்லாமே தித்திக்கின்றது !
நான் ஆனந்தமாக
வாழ இது போதுமே !
யார் எப்படி நடத்தினாலும்,
யார் என்ன
நினைத்தாலும்,
யார் என்ன
சொன்னாலும்,
நான் வாழ்வதற்கு
அதிகாரம் உண்டு !
அருகதை உண்டு !
உரிமை உண்டு !
*இது போதும் எனக்கு !*
என் தெய்வம்
தந்த வாழ்க்கை...
என் குரு அருளோடு
நன்றாகவே வாழ்ந்தேன் !
நன்றாகவே வாழ்கிறேன் !
நன்றாகவே வாழ்வேன் !
©குருஜீ கோபாலவல்லிதாஸன்
15.9.21, புதன் கிழமை.
சம்பகலதா நவமி
🙏🏼🇮🇳🐚🛕📿👣🕉️🎯
Read more...செவ்வாய், 14 செப்டம்பர், 2021
653. திருவாடிப்பூரம்
திங்கள், 13 செப்டம்பர், 2021
655. ஆசீர்வாதங்கள்
ஞாயிறு, 12 செப்டம்பர், 2021
654. பாரதி100
புதன், 23 ஜூன், 2021
652. ஸ்ரீமந் நாதமுனிகள்
திங்கள், 21 ஜூன், 2021
651. பெரியாழ்வார்
ஞாயிறு, 30 மே, 2021
648. திருக்கச்சிநம்பிகள்
650. ப்ரியதர்ஷினி
புதன், 26 மே, 2021
649. சந்திரசேகரா...
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020
647. ஆளவந்தார்...
646. ஆடிபெருக்கு
ஞாயிறு, 11 நவம்பர், 2018
645. மணவாள மாமுனிகள்
👣👏🏻🙌🏼💫🕉🔥
*மணவாள மாமுனி திருநக்ஷத்திரம் !*
எங்கள் மாமுனியே...
கலி கண்ட மாமுனியே...
எம் கலி தீர்க்க வந்த மாமுனியே...
சாதாரண ஜனங்களும் எம்பெருமானிடத்தில் சரணாகதி செய்துய்ய...
*சாதாரண வருஷத்தில்* அவதரித்த மாமுனியே...
ஜீவர்களின் சம்சார ஐயத்தையும்,
ஆத்ம பசியையும் போக்க
*ஐப்பசியில்* வந்துதித்த மாமுனியே...
24 தத்துவங்களையும்,
25வதான ஆத்மாவையும்,
உணர்த்தி
26வதான பரமாத்மாவை காட்டித்தர
ஐப்பசி *26ம் நாள்* அவதரித்த மாமுனியே !
வளர்பிறையாய் பக்தி
ஞான வைராக்கியம் வளர
திவ்யப்ரபந்தத்தை அனுதினமும் சொல்லித்தர
*வளர்பிறையில்* வாராது வந்த மாமுனியே !
சதுர்வித புருஷார்த்தமான,
அறம் பொருள் இன்பம் வீடு,
சதுர் வர்ணத்தவரும் அடைய,
*சதுர்த்தியில்* ஜகத்தை
ஆள வந்த மாமுனியே !
லக்ஷ்மி நாதன் தொடக்கமான,
நாதமுனி யாமுனாசார்யாரை நடுவில் கொண்ட,
யதிராஜன் வழி வந்த
குருபரம்பரை விளங்க,
குருவாரமான *வியாழனன்று* குலமணியாய் வந்த மாமுனியே !
ஆதிமூலமான நாராயணனை,
அன்போடு அடை நெஞ்சே,
என்று அக்கறையோடு சொல்ல,
*மூல நட்சத்திரத்தில்* முத்தாய் வந்த எங்கள் மாமுனியே !
சைலேச தயா பாத்திரமென
அரங்கனும் பிள்ளையாய்
வந்து ஸ்தோத்திரம் செய்த
ஆசார்ய குல சிகாமணியான
*மணவாள மாமுனியே இன்னுமோர் நூற்றாண்டு இரும்...*
©குருஜீ கோபாலவல்லிதாசர்
ஐப்பசி மூலம்...
11/11/2018, ஞாயிறு..
💫🕉🙌🏼👣👏🏻🔥
Read more...வெள்ளி, 13 ஏப்ரல், 2018
644. தமிழ் புத்தாண்டு !
அகத்தியர் சொல்படி
வழிபட்டு வாழும்
உன்னத தமிழருக்கு,
சிறந்த சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
தொல்காப்பியரின்
தொன்மையைப் பேசும்,
தொய்வில்லா தமிழருக்கு,
தெளிவான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ஆழ்வார்கள் சொன்ன
பாசுரங்கள் சேவிக்கும்
அற்புத தமிழருக்கு,
அருமையான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
நாயன்மார்கள் நவின்ற
பதிகங்கள் பாடும்
நன்மைமிகு தமிழருக்கு
நல்லதான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
கம்பனின் ராமாயணத்தில்
களித்துத் திளைக்கும்
கவித்துவ தமிழருக்கு
காதலோடு சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
ஔவையின் ஆத்திச்சூடியை
ஓயாமல் விரும்பும்
ஒப்புயர்வற்ற தமிழருக்கு
ஒற்றுமை தரும் சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
வள்ளுவரின் திருக்குறளை
வாய் நிறையப் பேசும்
வாட்டமில்லா தமிழருக்கு
வளமான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
மலையும் மலைசார்ந்த
குறிஞ்சி நிலத்தின்
குதூகலமான தமிழருக்கு
குறைவில்லா சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
காடும் காடுசார்ந்த
முல்லை நிலப்பகுதியின்
முதன்மையான தமிழருக்கு
முத்தான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
வயலும் வயல்சார்ந்த
மருத நிலப்பகுதியின்
மாண்புமிகு தமிழருக்கு
மரியாதையான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
கடலும் கடல்சார்ந்த
நெய்தல் நிலப்பகுதியின்
நேர்மையான தமிழருக்கு
நியாயமான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....
மணலும் மணல் சார்ந்த
பாலை நிலப்பகுதியின்
பாசமுள்ள தமிழருக்கு
பாங்கான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
அகநானூறு புறநானூறு
அழகாய் தந்தவரின் வழிவந்த
அன்புமிக்க தமிழருக்கு
அசத்தலான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
இயல் தமிழ்,இசைத் தமிழ்,
நாடகத் தமிழ் என
முத்தமிழ் தமிழருக்கு
முதலான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
சேர சோழ பாண்டியர்
கட்டிய கோவில்களையும்
தெய்வங்களையும் மதிக்கும்
பக்திமிகு தமிழருக்கு
பாரம்பரிய சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும்,
திரைகடலோடியும் திரவியம் தேடு என்றும்,
தெளிவாய் சொன்ன
தேன் போன்ற தமிழருக்கு,
தித்திக்கும் சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
வந்தாரை வாழவைக்கும்,
நொந்தாருக்கு ஆறுதல் தரும்,
நாத்திகம் பேசாத,
ஆத்திக தமிழருக்கு
ஆசீர்வாத சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
வாழிய செந்தமிழ்,
வாழ்க நற்றமிழர்,
வாழிய பாரத மணித்திருநாடு,
வந்தேமாதரம் என்னும்
தேசப்பற்றுள்ள தமிழருக்கு
தீர்கமான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
©குருஜீ கோபாலவல்லிதாசர்
Read more...சனி, 7 ஏப்ரல், 2018
643. காவிரி !
காவிரி !
நம் அன்னை !
நம் பாரதத்தின் சொத்து !
காவிரியின் மடியில்,
தமிழர்களும், கன்னடர்களும்
என்றுமே குழந்தைகள் !
மூத்த பிள்ளைக்கும்,
இளைய பிள்ளைக்கும்,
தாய் பேதம் பார்ப்பதில்லை !
காவிரியை தெய்வமாய் பார்ப்பவர்கள்,
அவளை வைத்து வியாபாரம் செய்வதில்லை !
அரசியல் செய்வதில்லை !
காவிரியை பிரச்சனையாய்
பார்ப்பவர்களாலேயே,
காவிரி மஹிமை
புரிவதில்லை !
காவிரியை அன்னையாய்
பார்ப்பவர்களால்
பிரச்சனைகள்
வருவதில்லை !
காவிரியாலேயே
தமிழகமும்,
கர்நாடகமும்
வாழ்கிறது !
காவிரியே...
தமிழக,
கர்நாடக
விவசாயிகளுக்கு
என்றுமே
நன்மை செய்வாள் !
காவிரி...
கருணையின் உரு !
காவிரி...
தெய்வீகத்தின் உரு !
காவிரி...
விளைச்சளின் கரு !
நாம் பிரார்த்திப்போம் !
காவிரியால்
தமிழகமும்
கர்நாடகமும்...
இன்னும் அன்பைப்
பறிமாற....
காவிரியால்
ஒற்றுமையே வளரும்...
காவிரியால்
நாட்டில் குழப்பத்தை
விளைவிப்பவரிடம்
இருந்து தேசத்தை
நாம் காப்போம் !
காவிரியில்...
தேவையான தண்ணீர்
எல்லோருக்கும்
கிடைக்கட்டும்...
காவிரி....
இனி எல்லோருக்கும்
அன்பை,
அழகை,
விளைச்சலை,
பாசத்தை,
நிம்மதியை,
ஆனந்தத்தையே...
தர நாம் பிரார்த்திப்போம்...
என்றோ ஆரம்பித்த,
காவிரி விவகாரம்...
நம் தலைமுறையோடு
நிரந்தரமாக முடியட்டும்...
எதிர்காலம்....
காவிரியின் கரையில்,
அமிருதமான தண்ணீரில்,
நிம்மதியாய்
வாழட்டும்....
இந்தக் காவிரிக் கவிதை...
இத்தனைக்கும்
நடுவில்,
அனைவரையும்,
வாழவைக்கத்துடித்து,
ஜீவ நதியாய்...
ஓடிக்கொண்டிருக்கும்
காவிரிக்கு
சமர்ப்பணம்...